நிதி அமைச்சின் செயலாளரான ஹர்ஷனா சூரியப்பெரும, நிதிப் பற்றிய குழு முன்னநிலையில் இன்று முன்நிலையாகியிருந்தார்.
நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷா டி சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே நிதி அமைச்சின் செயலாளர் இன்று முன்நிலையாகியிருந்தார்.
இந்த விசாரணையின் போது, குறித்த நிதி பரிவர்த்தனைகள் எவ்வாறு இடம்பெற்றன, கண்காணிப்பு முறைகள் எவ்வாறு செயல்பட்டன, மற்றும் அதில் ஏதேனும் தவறுகள் அல்லது அலட்சியங்கள் இருந்தனவா என்பன விரிவாக ஆராயப்பட்டிருந்தன.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.















