மத்திய பிரதேசத்தில் அதிவேகமாக சென்ற வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக அறிவிததுள்ளார்.
நேற்றிரவு ( 29) 8.30 மணியளவில் தார் மாவட்டத்தில் உள்ள சாலை ஒன்றில் 35 தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வேகமாக சென்ற வேன் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், 12 பேர் உயிரிழந்தனர்.
மேலும், விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 13 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை அதிக ஆட்களை ஏற்றி வந்தமையினாலும் அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது.
















