இந்திய அரசாங்கத்திடமிருந்து 600 மில்லியன் ரூபாய் மானிய உதவியுடன், ‘முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் நான்கு மாடி மருத்துவ விடுதி வளாகம் கட்டுவது’ தொடர்பாக அண்மையில் கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
2026 ஏப்ரல் 19-20 திகதிகளில் இந்தியப் பிரதி ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்தையொட்டி, இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜாவும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் பதில் செயலாளர் கலாநிதி டபிள்யூ.கே. விக்ரமசிங்கவும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுப் பரிமாறிக்கொண்டனர்.
இத்திட்டமானது, முல்லைத்தீவு மாவட்டப் பொது மருத்துவமனையில் (DGH), உயிர் காப்பு அமைப்பு, குளிரூட்டும் அமைப்பு, தீயணைப்பு ஜெனரேட்டர் மற்றும் யுபிஎஸ் அமைப்பு, தீ பாதுகாப்பு மற்றும் குழாய் வழி மருத்துவ வாயு விநியோக அமைப்பு உள்ளிட்ட நவீன வசதிகள் மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுடன் கூடிய நான்கு மாடி மருத்துவ விடுதி வளாகத்தின் கட்டுமானப் பணிகளை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்மொழியப்பட்ட மருத்துவ வார்டு வளாகமானது, 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான பரிசோதனை விகிதத்தை கணிசமாக அதிகரிப்பதன் மூலமும், பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவதைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதன் மூலமும், தொற்றா நோய்களால் (NCD) ஏற்படும் அகால மரணத்தைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது கட்டி முடிக்கப்பட்டதும், மருத்துவமனையில் படுக்கை நிரம்பல் விகிதம் 150%-க்கும் மேல் அதிகரித்து, மாவட்டத்தில் சுகாதார சேவைகளை கணிசமாக மேம்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட மருத்துவ வார்டு வளாகம், 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான பரிசோதனை விகிதத்தை கணிசமாக அதிகரிப்பதன் மூலமும், பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவதைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதன் மூலமும், தொற்றா நோய்களால் (NCD) ஏற்படும் அகால மரணத்தைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது கட்டி முடிக்கப்பட்டது, மருத்துவமனையில் படுக்கை நிரம்பல் விகிதம் 150%-க்கும் மேல் அதிகரித்து, மாவட்டத்தில் சுகாதார சேவைகள் மேம்படுத்தப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.














