புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட பின்னர் , வேல்ஸ் இளவரசி கேத்தரின் (Catherine) தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணமாக இத்தாலிக்குச் செல்லவுள்ளார்.
பிரித்தானிய இளவரசி கேத்தரின், புற்றுநோய் சிகிச்சை முடிந்து குணமடைந்த பின்னர் , தனது முதல் சர்வதேசப் பயணமாக (மே 13) இத்தாலியின் ரெஜியோ எமிலியா (Reggio Emilia) நகரத்திற்குச் சென்றுள்ளார்.
இது அவரது மீட்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இளவரசி மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
ஆரம்பகாலக் கற்றலில் இந்த நகரம் ஒரு தனித்துவமான மற்றும் உலகப் புகழ்பெற்ற அணுகுமுறையைக் கொண்டுள்ளதால், அதனைக் கண்டறிய இளவரசி திட்டமிட்டுள்ளார்.
இத்தாலிப் பயணத்தைத் தொடர்ந்து, குழந்தைகளின் வளர்ச்சிக்காகப் புதிய மாடல்களை உருவாக்கியுள்ள உலகின் ஏனைய நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
“தமது உடல்நலக் குறைவுக்குப் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் பயணம், அவர் அடுத்த சில தசாப்தங்களாகத் தீவிரமாக முன்னெடுக்க விரும்பும் ஒரு விடயத்தைச் சார்ந்தே அமைந்திருப்பது மிகவும் பொருத்தமானது” என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இளவரசியின் இந்தப் பயணம், அவர் மீண்டும் முழுமையான அரச பணிகளுக்குத் திரும்பியுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், பிரித்தானிய மக்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.













