இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்வலரான டொமி ராபின்சன் (Tommy Robinson) என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில் கலந்துகொள்வதற்காக, பிரித்தானியாவிற்குள் நுழைய முயன்ற 11 வெளிநாட்டு “தீவிர வலதுசாரி தூண்டுதலாளர்கள் (far-right agitators) எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
லண்டனில் இன்று ‘யுனைட் த கிங்டம்’ (Unite the Kingdom) என்ற பெயரிலான வலதுசாரி பேரணி நடைபெற திட்டமிட்டபட்டது.
இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
லண்டனின் மற்றொரு பகுதியில் வருடாந்த பாலஸ்தீன ஆதரவுப் பேரணியும் (pro-Palestinian demonstration) நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இரு எதிர் எதிர் கொள்கைகளைக் கொண்ட குழுக்களின் பேரணிகள் ஒரே நாளில் நடப்பதால், மோதல்கள் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதனை எதிர்கொள்ள 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அண்மைக்கால வரலாற்றில் லண்டன் பொலிஸாருக்கு இது மிகவும் பரபரப்பான ஒரு நாளாக இருக்கும் என மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்தப் பேரணிகள் குறித்து நேற்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer), வன்முறையாளர்களுக்கெதிராகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.














