ஐக்கிய இராச்சியத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஓர் அங்கமாக, லண்டனில் அமைந்துள்ள மார்ல்பரோ இல்லத்தில் (Marlborough House), பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஷெர்லி அயோர்கோர் போச்வே (Hon. Shirley Ayorkor Botchwey) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
காலநிலை மாற்றம், காலநிலை நிதியுதவி, ஜனநாயக நல்லாட்சி, பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் உறுப்பு நாடுகளுக்குப் பொதுநலவாய அமைப்பின் தொடர்ச்சியான ஆதரவு ஆகியன குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, மீட்சியடைதல், நிலைபேறான அபிவிருத்தி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நல்லாட்சி ஆகியவற்றில் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை நான் மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், பொதுநலவாய செயலகம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்கும் ஆதரவிற்கும் இதன்போது பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.












