எதிர்வரும் ஜூன் 20 முதல் சாரதிகள் கட்டாயமாக ஆசனப்பட்டி (seat belt) அணிவது தொடர்பான விதிமுறை கடுமையாக அமுல்படுத்தப்படும் என வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.
அதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைவரும் ஆசனப் பட்டிகளை அணிய வேண்டும் என்று சபையின் தலைவர் மஞ்சுல குலரத்ன தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களில் பயணிக்கும்போது, முன் இருக்கை மற்றும் பின் இருக்கைப் பயணிகள் இருவரும் ஆசனப்பட்டி அணிவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
பொதுமக்கள் விதிமுறைக்கு இணங்குவதற்கு முன்னதாக ஒரு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
மேலும் அந்தக் காலம் ஜூன் 19 அன்று முடிவடையும்.
அதன்படி, ஆசனப்பட்டி விதிமுறை ஜூன் 20 முதல் விதிவிலக்கின்றி முழுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.












