தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இயக்குநருமான தனுஷின் மூத்த மகன் யாத்ரா விரைவில் ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
இந்த மெகா பட்ஜெட் திரைப்படத்தை தனுஷ் இயக்கவிருப்பது ஹொலிவூட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தனுஷ் இயக்கிய ‘ராயன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் யாத்ரா கேமரா கையாண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இதேவேளை, தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பட பாடலில் சில வரிகளையும் எழுதி தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
தற்போது தீவிர நடிப்பு மற்றும் நடனப் பயிற்சிகளுக்குப் பிறகு, அவர் ஹீரோவாக களம் இறங்குகிறார்.
இந்தத் திரைப்படம் யாத்ராவின் தாத்தாவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பில்லா’ பாணியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















