மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மகிளூர் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் இன்று அதிகாலை 08 அடி நீளமான ராட்சச முதலை உட் புகுந்துள்ள நிலையில் , பின்னர் வெல்லாவெளி பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து பல்வேறு பிரேயத்தனங்களுக்கு மத்தியில் முதலையை மடக்கி பிடித்துள்ளனர்.
பின்னர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வாகனத்தினூடாக, வன ஜீவராசிகள் திணைக்களத்தினரின் உதவியுடன் பாதுகாப்பாக முதலை விடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.













