2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளின் போது தாங்கள் எதிர்கொள்ளும் பயணக் கட்டுப்பாடுகள் குறித்து, ஃபிஃபா (FIFA) அமைப்பிடம் ஈரான் அதிகாரப்பூர்வமாக முறைப்பாடு அளிக்கவுள்ளது.
வட அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரின்போது தாங்கள் பயணக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவதாகக் கூறி இந்த முறைப்பாட்டினை அளிக்கவுள்ளதாக ஈரான் கால்பந்து சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை (18) தெரிவித்தார்.
போட்டிக்கான தனது தயாரிப்பு அட்டவணையை வெகு முன்னதாகவே சமர்ப்பித்திருந்த போதிலும், ஈரான் தேசிய கால்பந்து அணி மீண்டும் ஒருமுறை அமைப்பாளர்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை எதிர்கொண்டுள்ளது. இது அதன் தொழில்நுட்பக் குழுவினரின் திட்டங்களைச் செயல்படுத்துவதைப் பாதித்துள்ளது என்றும் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பெல்ஜியத்திற்கு எதிரான அடுத்த போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, மெக்ஸிகோவின் டிஜுவானாவில் உள்ள தங்கள் முகாமிலிருந்து அமெரிக்காவிற்கு விமானத்தில் செல்ல ஈரான் விரும்பியது.
ஆனால், தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் ஈரான் கால்பந்து சங்கம் கூறுகிறது.














