கடந்த நான்கு ஆண்டுகளில் தனது சொந்த மண்ணிலான டெஸ்ட் தொடர் வெற்றியை மேற்கிந்தியத்தீவுகள் அணி முதன் முறையாக உறுதி செய்துள்ளது.
அன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் செவ்வாயன்று (06) நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, மழையால் பாதிக்கப்பட்டு விறுவிறுப்பற்ற முறையில் சமநிலையில் முடிவடைந்ததையடுத்து மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்த மகத்தான பெருமையை பெற்றது.
முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் அடிப்படையில் படுதோல்வி அடைந்ததால், தொடரை சமன் செய்ய வெற்றி தேவைப்பட்ட நிலையில், இலங்கை அணி மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை 251 ஓட்டங்களுக்கு ஒன்பது விக்கெட்டுகள் இழந்து டிக்ளேர் செய்தனர்.
இதன் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக வெல்ல 302 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை மேற்கிந்தியத்தீவுகளுக்கு இலங்கை நிர்ணயித்தது.
இருப்பினும், மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஜோடியான ஜோன் கேம்ப்பெல் மற்றும் பிராண்டன் கிங் ஆகியோர் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்கள் சேர்த்தனர்.
முதலில் ஒரு சிறு தூறலாலும், பின்னர் நீண்ட நேரம் நீடித்த மழையாலும் பாதிக்கப்பட்ட இந்த ஜோடியின் இணைப்பாட்டம் 109 ஓட்டங்களுடன் நிறைவுக்கு வந்தது.
கேம்ப்பெல் மற்றும் கிங் ஆகிய இருவரும் தலா 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
போட்டியின் இந்த முடிவுகளுடன் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை மேற்கிந்தியத்தீவுகள் அணி 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
சொந்த மண்ணில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் இறுதி டெஸ்ட் தொடர் வெற்றி, 2022-ல் பங்களாதேஷுக்கு எதிரான 2-0 என்ற கணத்திலான அபார வெற்றியாகும்.
அப்போது இவ்விரு மைதானங்களிலும், பின்னர் செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சம்மி மைதானத்திலும் அந்த அணி எளிதாக வெற்றி பெற்றது.
இலங்கைக்கு எதிராக அவர்கள் கடைசியாகத் தொடரை வென்றது 2003-ல் சொந்த மண்ணில் நடைபெற்ற இதே போன்ற இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில்தான்.
அதில் அவர்கள் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.












