திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் புதிய அரசு காட்டும் ஆர்வம் குறித்து, திருகோணமலை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் அரசாங்கத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதாக அதன் தலைவர் பி. குலதீபன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் திருகோணமலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், திருகோணமலை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், இந்தியாவின் வர்த்தக சம்மேளனங்களுடன் சுற்றுலாத்துறை தொடர்பாக பல ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தங்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், இதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து, நாட்டின் பொருளாதாரத்தை உற்பத்தித்திறன் மிக்க நிலைக்கு கொண்டு செல்ல முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.











