நீட் (NEET) தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தாண்டி, அந்த மருத்துவ நுழைவுத் தேர்வையே முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்தின் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK) செவ்வாய்க்கிழமை (21) வலியுறுத்தியது.
மேலும், மருத்துவக் கல்வி தொடர்பான விவகாரங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்றும் அக்கட்சி கோரியது.
டெல்லியில் நீட் (NEET) தேர்வு தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இவ்விடயத்தில் தங்கள் நிலைப்பாடு “சமரசம் செய்துகொள்ள முடியாததும் உறுதியானதுமான” ஒன்று என்றும், மருத்துவப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், தீர்வின் ஒரு பகுதியாக, அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் (Concurrent List) உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு (State List) மாற்ற வேண்டும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
இது தொடர்பான ஒரு அறிக்கையில், முக்கிய எதிர்க்கட்சியான திமுக-வின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் “நீட் (NEET) தேர்வை நாங்களே இரத்து செய்வோம்” என்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்குகளைப் பெறுவதற்காக மக்களை ஏமாற்றும் “மோசடி அரசியலில்” தாங்கள் ஒருபோதும் ஈடுபடமாட்டோம் என்றும் டிவிகே கூறியுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.













