யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
நீர்வேலி பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெற்று வருவதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் 5.650 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 600 போதை மாத்திரைகளையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.













