வல்வைப் படுகொ*லையின் 37வது ஆண்டு நினைவேந்தல் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை நகரில் தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த்தேசியப் பேரவையினரின் ஏற்பாட்டில் வல்வைப் படுகொ*லையின் 37ம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
1989.08.02 அன்று இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறை பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது 72 பொது மக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
படுகொலை செய்யப்பட்ட 72 பொது மக்களது நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என்.ஶ்ரீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட கட்களின் உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து பொதுச் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்தனர்.













