கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியிருந்தவர்களின் குரல்களைக் கேட்பதற்காக, மீட்புக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நூற்றாண்டில் கொலம்பியாவைத் தாக்கிய மிகக் கடுமையான நிலநடுக்கமான, 7.4 ரிக்டர் அளவு கொண்ட இந்த நிலநடுக்கம், திங்கள்கிழமை (10) அதிகாலையில் அந்நாட்டின் கோப்பி சாகுபடி மையப் பகுதியை உலுக்கியது.
இதனால் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், பாடசாலைகள் மற்றும் சுகாதார மையங்கள் விரிசல் அடைந்தும், சாய்ந்தும் அல்லது தரைமட்டமாகியும் போயின.
பாதிக்கப்பட்ட நகரங்களிலிருந்து பெறப்பட்ட தனித்தனித் தகவல்களின்படி, செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 254-ஆக உள்ளது.
இதில் கோப்பி உற்பத்திப் பகுதியின் உட்புறத்தில் அமைந்துள்ள பெரேரா (Pereira) நகரில் 101 பேரும், நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான சலியில் (Cali) 95 பேரும் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்க மையம் அமைந்துள்ள இடத்திற்கு அருகிலுள்ள, பசிபிக் பெருங்கடலை நோக்கிய காடுகள் நிறைந்த சோக்கோ (Choco) பிராந்தியத்தில் வசிக்கும் பல பழங்குடியின சமூகத்தினர் இன்னும் மின்சாரம் அல்லது அடிப்படைச் சேவைகள் ஏதுமின்றி உள்ளனர்; இது மீட்புப் பணிகளைச் சிக்கலாக்கியுள்ளது.
புதிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, வீடுகளை இழந்த மக்களுக்குப் பொருளாதார உதவி வழங்குவதாக உறுதியளித்தார்.
அதிகாரத்திற்கு வந்த உடனேயே உடனடி சிக்கன நடவடிக்கைகளை அறிவித்த அரசாங்கம், தற்போது இடதுசாரி முந்தைய ஆட்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட 180 பில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்பிலான பட்ஜெட்டை மாற்றியமைக்கத் தயாராகி வருகிறது.








