இந்தியா இன்று (15) தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக் கொண்டாடுகிறது.
1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதிலிருந்து எட்டு தசாப்தங்கள் நிறைவடைவதைக் குறிக்கும் இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினம், நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகத் திகழ்கிறது.
நாடு முழுவதும் தேசியப் பெருமிதத்துடன் கொண்டாடப்படும் இந்நாள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பரிய தியாகங்களைச் சிறப்பிப்பதோடு, ஜனநாயகம், அறிவியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் கொண்டாடுகிறது.
80 ஆண்டுகால இந்த முக்கிய மைல்கல், கடந்த காலத்தைப் போற்றுவதற்கும், வலிமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கி ஒரு கூட்டு அர்ப்பணிப்பை ஊக்கப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார்.
கொடியேற்ற நிகழ்வின்போது, 1721 ஃபீல்ட் பேட்டரி (சடங்குப் பிரிவு) படைப்பிரிவினரால் 21 பீரங்கி குண்டுகள் முழங்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்தச் சடங்குப் பிரிவினர் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 105 மிமீ எடை குறைந்த கள பீரங்கிகளைப் பயன்படுத்தினர்; இப்பிரிவை மேஜர் பவன் சிங் ஷெகாவத் வழிநடத்தினார், அதேவேளையில் நைப் சுபேதார்.
பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில், தனது சுதந்திர தின உரையின்போது ‘சக்தி கி சப்ததாரா’ (Shakti Ki Saptadhara) எனினும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்தியாவின் வலிமையாகத் திகழும் மற்றும் நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஏழு அம்சங்களை இது வரையறுக்கிறது.
காடுகளில் ஆயுதம் ஏந்திய நக்சலைட்டுகள் (பிரிவினைவாதிகள்) ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதிகார மையங்களுக்குள் ஊடுருவியுள்ள அறிவுசார் நக்சலைட்டுகளையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார், அப்போதுதான் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நாட்டின் இளைஞர்களை ஒன்றிணைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
துப்பாக்கி முனையில் நாட்டின் பல பகுதிகளை பிணைக்கைதிகளாக வைத்திருந்த ‘சிவப்பு பயங்கரவாதத்தின்’ (Red Terror) பிடியைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, “மக்களைப் பாதுகாப்பதற்காக”மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் 3,500-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் உயிரிழந்ததையும் குறிப்பிட்டார்.
இதன் மூலம், 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா சுதந்திரம் அடைந்திருந்தும், நக்சலிசத்தின் பிடியில் சிக்கியிருந்த நிலைக்கு இடையிலான முரண்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார்.
நக்சலிச ஆதிக்கம் காரணமாகச் சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட தொலைதூரப் பகுதிகளுக்கும் வளர்ச்சி எவ்வாறு சென்றடைந்துள்ளது என்பதையும், தற்போது அதே பகுதிகளில் வளர்ச்சிக் கொடி உயரே பறப்பதையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.






