உக்ரேன் தனது 35 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், கடந்த மாதம் பதவியேற்ற பின்னர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக, இங்கிலாந்துப் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் திங்களன்று (24) கீவ் நகருக்குச் செல்லவுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் உக்ரேனுக்கு வலுவான ஆதரவை அளிப்பதாக பர்ன்ஹாம் உறுதியளித்துள்ளார்.
கீவ் நகரை ஆதரிக்கும் நாடுகளை ஒன்றிணைக்கும் ‘விருப்பமுள்ளோரின் கூட்டணி’யின் முதல் கூட்டத்திற்கு பர்ன்ஹாம் கீவ் நகரில் இணைத் தலைமை தாங்குவார்.
இக்கூட்டம் ‘கலப்பு’ (hybrid) முறையில் நடைபெறும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி அலுவலகம் வெள்ளிக்கிழமையன்று உறுதிப்படுத்தியது.
அதாவது, சில பங்கேற்பாளர்கள் நேரில் கலந்துகொள்வார்கள், மற்றவர்கள் காணொளி வாயிலாக இணைவார்கள்.
உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி லண்டனுக்கு வருகை தந்த சில வாரங்களுக்குப் பின்னர் பர்ன்ஹாம் இந்த வருகையை மேற்கொண்டுள்ளார்.













