இரத்மலானை விமான நிலையத்தில் இயங்கி வரும் விமானப் பயிற்சி நிலையத்திற்குச் சொந்தமான செஸ்னா 152 (Cessna 152) வகை பயிற்சி விமானம் ஒன்று இன்று (25) கடினமான முறையில் தரையிறங்கியதில் சேதமடைந்துள்ளது.
4R-DRA என்ற பதிவெண்ணைக் கொண்ட குறித்த விமானம் இந்தச் சம்பவத்தில் சேதமடைந்துள்ளதுடன், அதனை இயக்கிய விமானி எவ்வித காயங்களும் இன்றி தப்பியுள்ளார்.
சம்பவம் காரணமாக விமான நிலையத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சேதமடைந்த விமானத்தை அப்புறப்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியை சீரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.














