விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்குரிய நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அவரிடம் கையளித்தார்.
கலாநிதி ரோஷனி திசாநாயக , பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் (இலங்கை நிர்வாக சேவை – விசேட தரப் பிரிவு) கடமையாற்றியுள்ளார்.













