யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போரிட்டு வரும் சவுதி தலைமையிலான கூட்டணி, இஸ்லாத்தின் புனித நகரமான மக்காவை அவர்கள் குறிவைத்ததாக புதன்கிழமை (செப்டம்பர் 16) குற்றம் சாட்டியது.
இச்செயல் இஸ்லாமிய உலகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, இப்பிராந்தியத்தில் நிலவும் மோதலையும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்திகளுக்கும், சவுதி ஆதரவு பெற்ற யேமன் அரசாங்கத்திற்கும் இடையே மீண்டும் வெடித்துள்ள மோதலில் சவுதி அரேபியா நேரடியாக இழுக்கப்பட்டுள்ளது.
ஹவுத்திகள் அந்த நாட்டின் மீது கடல்வழி முற்றுகையை அறிவித்து, செங்கடலில் அதன் கப்பல்களைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பரந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போரினால் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதை முடக்கப்பட்டுள்ள நிலையில், சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு மிக முக்கியமான பாதையான பாப் அல்-மண்டப் நீரிணை மற்றும் யேமனின் செங்கடல் கடற்கரைப் பகுதி முழுவதையும் அந்த அமைப்பு கடந்த வாரம் மின்னல் வேகத் தாக்குதல் மூலம் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.
ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான யாத்ரீகர்களை ஈர்க்கும் சவுதி நகரமான மக்காவை நோக்கிச் சென்ற கிளர்ச்சியாளர்களின் ட்ரோன் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாக ரியாத் வெளியிட்ட அறிக்கையை ஹவுத்திகள் உடனடியாக நிராகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.













