• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பங்களாதேஷுடன் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் இந்தியா!

பங்களாதேஷுடன் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் இந்தியா!

Yuganthini by Yuganthini
2021/03/20
in இந்தியா
72 1
A A
0
35
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரதமர் நரேந்திர மோடியின் டாக்கா விஜயத்தின்போது, இந்தியா- பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பங்களாதேஷில் நடைபெறவுள்ள சுதந்திர தினம் மற்றும் பங்கபந்து செய்க் முஜ்பர் ரஹ்மானின் 100 ஆவது பிறந்த தினம் ஆகிய நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மாநில தலைவர்கள் மற்றும் இலங்கை, நேபாளம், பூட்டான் , மாலைத்தீவு அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வெவ்வேறான நிகழ்ச்சி நிரலின் கீழ் கொண்டாட்டங்களில் பங்கேற்கவுள்ளனர்.

பங்களாதேஷுக்கு இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். எந்தவொரு உச்சி மாநாடும் இல்லாமல், ஐந்து நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், 10 நாட்களுக்குள் பங்களாதேஷ்க்கு இவ்வாறு சென்றதில்லை என பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் தெரிவித்துள்ளார்.

பத்து நாட்கள் கொண்டாட்டம் தொடர்பாக கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் மேலும் கூறியுள்ளதாவது, “இது மிகவும் அசாதாரண நேரம். (கொவிட்- 19) ஆனால் அயல்நாடுகளின் மாநில தலைவர்கள் தேசத்தின் தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தர இருக்கின்றனர்.

இதேவேளை பிரதமர் நரேந்திர மோடி, பங்களாதேஷ் விஜயத்தின்போது, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, டாக்காவுக்கு வெளியே மூன்று இடங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது இருதரப்பினரும் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளனர்.

எனினும் குறித்த ஒப்பந்தம் தொடர்பாக இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்நிகழ்வு குறித்து வெளிவிவகார செயலாளர் மசூத் பின் மோமன் கூறியுள்ளதாவது, “பேரழிவு மேலாண்மை மற்றும் இரு நாடுகளின் சில நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படலாம்.

தற்போது நாங்கள் ஒவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் தயார் செய்துக்கொண்டிருக்கின்றோம். ஓரிரு நாட்களுக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் இறுதி பிரதிகளை பெற்றுக்கொள்ள இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அனைத்து வெளிநாட்டு தலைவர்களும், சுதந்திர தின தியாதிகளுக்கு மரியாதை செலுத்துவதற்காக சவாரிலுள்ள தேசிய நினைவுச் சின்னத்தை பார்வையிடுவார்கள்.

தன்மொண்டி 32இல் உள்ள பங்கபந்து அருங்காட்சியகம் மற்றும் பங்களாதேஷ் ஸ்தாபக தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் அதேபோன்று சிறப்பு இராணுவ அணி வகுப்புக்களை பார்வையிடுவதற்கும் சிறப்பு விருந்துகளில் கலந்துகொள்வதற்கும் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இதேவேளை பிரதமர் மோடி, துங்கிபாரவியில் அமைந்துள்ள பங்கபந்து சந்நிதியையும் டாக்கா வெளியே காணப்படுகின்ற இரண்டு இந்து ஆலயங்களான கோபல்பஞ்சி மற்றும் தென்மேற்கு சத்கிராவில் உள்ள இந்து ஆலயத்தையும் பார்வையிடவுள்ளார்.

குறிப்பாக இந்து மாதுவா சமூகத்தின் வழிபாட்டுத் தலங்கள், மாதுவா சமூக உறுப்பினர்கள் ஏராளமானோர் மேற்கு வங்கத்தில் வசிக்கின்றனர்.

இதேவேளை குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முதல் வெளிநாட்டு பிரமுகராக மலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ், கடந்த மார்ச் 17ஆம் திகதி, மூன்று நாள் விஜயமாக பங்களாதேஷ்க்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவரைத் தொடர்ந்து இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 2 நாள் விஜயமாக மார்ச் 19ஆம் திகதி, பங்களாதேஷை சென்றடைந்தார்.

நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி, மார்ச் 22 முதல் இரண்டு நாள் விஜயத்தில் டாக்காவில் இருப்பார். பூட்டானின் பிரதமர் லோடே ஷெரிங், மார்ச் 24 முதல் 25 வரை டாக்காவில் இருப்பார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 26ஆம் திகதியன்று பங்களாதேஷ்க்கு விஜயம் மேற்கொண்டு  மறுநாள் இந்தியாவை சென்றடைவார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பல்வேறு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் சில உயர்மட்ட தலைவர்கள் இந்த நிகழ்வில் காணொளி செய்திகளை அனுப்புவார்கள் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் தெரிவித்துள்ளார்.

Related

Tags: செய்க் முஜ்பர் ரஹ்மான்பிரதமர் நரேந்திர மோடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முன்னாள் நிதி அமைச்சர் ரவி உட்பட எண்மருக்கும் தொற்றில்லை!!

Next Post

பதுளை – பசறை விபத்து: பாதிக்கப்பட்டோருக்கு செந்தில் தொண்டமான் உதவி

Related Posts

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”
JUST IN

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”

2025-11-30
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!
இந்தியா

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!

2025-11-30
வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு-  அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!
இந்தியா

வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு- அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!

2025-11-29
டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையவர் வீடி இடித்து நொறுக்கப்பட்டது!
இந்தியா

புதுடில்லி கார் குண்டுவெடிப்பு – வெளியான மேலும் பல உண்மைகள்!

2025-11-28
சென்யார் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பகுதிகளுக்கு எச்சரிக்கை!
இந்தியா

சென்யார் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பகுதிகளுக்கு எச்சரிக்கை!

2025-11-27
பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இன்ஸ்டா நண்பன்
ஆசிரியர் தெரிவு

பெங்களூரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ஏமாந்த இலங்கை மாணவி!

2025-11-26
Next Post
பதுளை – பசறை விபத்து: பாதிக்கப்பட்டோருக்கு செந்தில் தொண்டமான் உதவி

பதுளை - பசறை விபத்து: பாதிக்கப்பட்டோருக்கு செந்தில் தொண்டமான் உதவி

வடக்கு சுகாதாரத் தொண்டர்களின் பிரச்சினை- ஜனாதிபதி, பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு!

வடக்கு சுகாதாரத் தொண்டர்களின் பிரச்சினை- ஜனாதிபதி, பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு!

அமைதி ஒப்பந்தத்தின் படி மே 1ஆம் திகதிக்குள் அமெரிக்க துருப்புக்கள் வெளியேற வேண்டும்: தலிபான்கள்!

அமைதி ஒப்பந்தத்தின் படி மே 1ஆம் திகதிக்குள் அமெரிக்க துருப்புக்கள் வெளியேற வேண்டும்: தலிபான்கள்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

0
மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!

மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!

0
யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

0
உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

0
இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்த நேபாளம்!

இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்த நேபாளம்!

0
குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

2025-12-01
மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!

மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!

2025-12-01
யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

2025-12-01
உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

2025-12-01
இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்த நேபாளம்!

இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்த நேபாளம்!

2025-12-01

Recent News

குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

2025-12-01
மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!

மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!

2025-12-01
யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

2025-12-01
உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.