• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் நிலஅபகரிப்பினை நிறுத்த வேண்டும் – சாணக்கியன்

1.897 Views
1 year ago
131 2
0
Share
Facebook Twitter WhatsApp
    யே.பெனிற்லஸ் யே.பெனிற்லஸ்
    Subscriber

    வடக்கு, கிழக்கில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு உறுதுணையாக இல்லாமல் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர். தேசிய பட்டியலில் ஒருவருடன் சேர்த்து ஐவர் இருக்கின்றனர்.

    உண்மையிலேயே இந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தினை கொடுக்க வேண்டும். எங்களுடைய வடக்கு, கிழக்கிலே அபிவிருத்தி பணிகளை செய்வதற்கு அவர்கள் முன்வர வேண்டும்.

    எங்களுடைய பாரம்பரியமான நிலங்களை அபகரிப்பதற்கு, அதேபோன்று எங்களுடைய மதஸ்தலங்களினுடைய அபகரிப்பு செய்வதனை நிறுத்திவிட்டு உண்மையிலேயே  முழுமையான அபிவிருத்தி திட்டங்களை கொண்டுவருவதற்கு முயற்சிக்க வேண்டும்.

    உதாரணமாக தொல்பொருள் திணைக்களத்தினால் அன்புமுனை என்று சொல்லப்படும் ஒரு குளம் கூட கிரான் பிரதேசத்திலே இன்று வரைக்கும், அதற்கு நிதி ஒதுக்கப்பட்டும் அதனை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

    அதற்குரிய காரணம் தொல்பொருள் திணைக்களத்தினால் அந்த இடத்தினை அவர்களுக்குரிய இடமாக அடையாளப்படுத்தியுள்ளனர். இதன்காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் இன்று அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் நபர்கள், இன்று நாடாளுமன்றத்தில் மட்டும் ஒரு ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் இதை கதைக்காமல், உண்மையிலேயே ஜனாதிபதியின் விசேட குழுவிற்கு இரண்டு தமிழர்களையாவது உள்வாங்க வைக்கலாம்.

    இதனைப்பற்றி அறிந்த தமிழர்களையாவது உள்வாங்க வைக்கலாம். அதனை விட்டுவிட்டு அபிவிருத்தி என்ற பெயரில் எங்களுடைய நிலஅபகரிப்பினை அவர்கள் நிறுத்த வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Category: இலங்கை கிழக்கு மாகாணம் கொழும்பு மட்டக்களப்பு முக்கிய செய்திகள்
    Share23Tweet14Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகளால் யோசனை திட்டம் தயாரிப்பு
    ஆசிரியர் தெரிவு

    தற்போதுள்ள நிதியை பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

    2022-06-27
    நாட்டை முடக்க தயாராகின்றது அரசாங்கம்? – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
    இலங்கை

    நாட்டை முடக்க தயாராகின்றது அரசாங்கம்? – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

    2022-06-27
    புதுச்சேரியில் பாடசாலைகளை மூடுவதற்கு உத்தரவு!
    இலங்கை

    பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதிக்குப் பின்னரே திறக்கப்படும்

    2022-06-27
    கொழும்பு – கோட்டையை வந்தடையவிருந்த பல ரயில்கள் தாமதம்
    இலங்கை

    புகையிரத சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அறிவிப்பு!

    2022-06-27
    அவசரமாக ரணிலை சந்தித்து பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது கொழும்பு அரசியல்!
    ஆசிரியர் தெரிவு

    எந்த நேரத்திலும் முழுமையாக முடங்கும் அபாயத்தில் இலங்கை?

    2022-06-27
    யூரியா உரத்தை ஏற்றிய கப்பலின் வருகை மேலும் தாமதமாகின்றது
    இலங்கை

    யூரியா உரத்தை ஏற்றிய கப்பலின் வருகை மேலும் தாமதமாகின்றது

    2022-06-27
    Next Post
    கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,605பேர் பாதிப்பு- 98பேர் உயிரிழப்பு!

    கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,605பேர் பாதிப்பு- 98பேர் உயிரிழப்பு!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.