இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 69 ஆயிரத்து 914 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 35 இலட்சத்து 25 ஆயிரத்து 379 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 21 இலட்சத்து 53 ஆயிரத்து 713 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் 12 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலையில், சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் 904 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 70 ஆயிரத்தை கடந்துள்ளது.



















