• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தடுப்பூசிக்கான தட்டுப்பாடு இன்னும் மூன்று மாதங்கள் நீடிக்கும்

தடுப்பூசிக்கான தட்டுப்பாடு இன்னும் மூன்று மாதங்கள் நீடிக்கும்

சீரம் நிறுவன நிறைவேற்று அதிகாரி தகவல்

PradeepS S by PradeepS S
2021/05/04
in இந்தியா, முக்கிய செய்திகள்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

‘கொரோனா தடுப்பூசித் தட்டுப்பாடு மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்’என சீரம் நிறுவன நிறைவேற்று அதிகாரியான அடர் பூனவல்லா கூறி உள்ளார். மேலும், இந்திய மத்திய அரசு புதிதாக எந்த தடுப்பூசிக் கோரிக்கையையும் தமக்கு தரவில்லை என வெளியான தகவலையும் அவர் மறுத்துள்ளார்.

இந்தியாவில் தற்போது கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் கோவிஷீல்ட் மருந்தை புனேவில் உள்ள சீரம் நிறுவனமும், கோவாக்சினை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் உற்பத்தி செய்கின்றன. முன்களப் பணியாளர்கள், முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், கடந்த மே முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால், தற்போதைய நிலையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை 11 மாநிலங்கள் மட்டுமே தொடங்கியுள்ளன.

இந்நிலையில், சீரம் நிறுவன நிறைவேற்று அதிகாரியான அடர் பூனவல்லா இங்கிலாந்தில் ‘ஃபினான்சியல் டெய்லி’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘‘தற்போது மாதத்திற்கு 6-7 கோடி டோஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. ஜூலைக்குப் பிறகுதான் 10 கோடி டோஸ் உற்பத்தியாக அதிகரிக்கப்படவுள்ளது. எனவே இன்னும் 2-3 மாதத்திற்கு தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நீடிக்கும். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை இவ்வளவு சீக்கிரத்தில் தாக்கும் என அதிகாரிகள் யாரும் எதிர்பார்க்கவில்லை.

மேலும், ஆண்டுக்கு 100 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்ய வேண்டிய நிலை வரும் என நாங்களும் நினைக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து புதிதாக கோரிக்கைகள் எதுவும் கிடைக்கப் பெறாததால் தடுப்பூசி உற்பத்தி உடனடியாக விரைவுபடுத்தப்படவில்லை’’ என்று கூறியிருந்தார். ஏற்கனவே, இந்தியாவில் தடுப்பூசி வழங்கக் கோரி சக்தி வாய்ந்த நபர்களிடமிருந்து பல்வேறு மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து பூனவல்லா தனது குடும்பத்துடன் இங்கிலாந்து சென்று தங்கியுள்ளார். தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் நிலையில் மத்திய அரசு புதிதாக எந்த கோரிக்கையையும் தரவில்லை என அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

‘‘கடந்த முறை கொடுக்கப்பட்ட 10 கோடி டோஸ்களுக்கான கோரிக்கையில், தற்போது வரை 8.744 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை சீரம் நிறுவனம் வழங்கி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், மே, ஜூன், ஜூலை மாதங்களில், 11 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்க சீரம் இந்தியா நிறுவனத்துக்கு 100 சதவீத முன்பணமாக 1732.5 கோடி கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி வழங்கப்பட்டது. அதை அந்நிறுவனம் அன்றே பெற்றுக்கொண்டது. இதே போல, 5 கோடி கோவாக்சின் தடுப்பூசி டோஸ்களுக்கும் முன்பணம் தரப்பட்டுள்ளது. ஆகையால், தடுப்பூசிகளுக்கு புதிதாக கோரிக்கைப் பத்திரம் கொடுக்கவில்லை என கூறுவது தவறானது” என மத்திய அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தனது டுவிட்டரில் பூனல்லா, ‘‘நான் கூறிய தகவல் தவறாக வெளிவந்துள்ளது. தற்போது வரை நாங்கள் 26 கோடிக்கும் அதிகமான டோஸ்களுக்கான கோரிக்கைகளைப் பெற்றுள்ளோம். அதில் 15 கோடி டோஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 11 கோடி டோஸ் விரைவில் தரப்படும். உற்பத்தியை ஒரே நாளில் அதிகரித்து விட முடியாது. குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகளே தடுப்பூசியை உற்பத்தி செய்வதில் திணறும் நிலையில், இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் தேவையான தடுப்பூசியை வழங்குவது சாதாரண வேலையல்ல. அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைக்க வேண்டுமென்பதே எங்களின் விருப்பம். அதற்காக நாங்களும் கடினமாக உழைக்கிறோம்’’ எனக் கூறியுள்ளார்.

இந்தியாவில் இதுவரை 15 கோடியே 71 லட்சத்து 98 ஆயிரத்து 207 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 12 சதவீதமாகும். 12 கோடியே 83 லட்சத்து 74 ஆயிரத்து 277 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டு கோடியே 88 இலட்சத்து 23 ஆயிரத்து 930 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

Related

Tags: covid-19Covishield VaccineINDIAindia covidpoonawallaserumகொரோனாசீரம்தடுப்பூசிபூனவல்லா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லண்டனிலிருந்து ஒக்சிஜன் சிலிண்டர்கள் தமிழகம் வந்தன 

Next Post

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Related Posts

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

2025-12-02
யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்ட 729 எரிவாயு சிலிண்டர்கள்! 
இலங்கை

யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்ட 729 எரிவாயு சிலிண்டர்கள்! 

2025-12-02
ஜெஃப்ரி எப்ஸ்டீன்  வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பிரதமர் வலியுறுத்து!
இங்கிலாந்து

இளவரசர் ஆண்ட்ரூவின் இரண்டு முக்கிய கௌரவங்கள் பறிப்பு!

2025-12-02
இங்கிலாந்தில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட இரண்டு கைதிகள் இன்னும் தலைமறைவு –  நீதி செயலாளர் தெரிவிப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட இரண்டு கைதிகள் இன்னும் தலைமறைவு – நீதி செயலாளர் தெரிவிப்பு!

2025-12-02
இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!
உலகம்

இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

2025-12-02
இலங்கை

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில்

2025-12-02
Next Post
நாடு முழுவதும் திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் நடத்துவதற்கு தடை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் நிலஅபகரிப்பினை நிறுத்த வேண்டும் – சாணக்கியன்

கல்முனை பிரதேச செயலக விவகாரம் – அதிர்ச்சி தகவலினை வெளியிட்டார் சாணக்கியன்

கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை

கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

0
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

0
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

0
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

0
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

0
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

2025-12-02

Recent News

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.