• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா

இந்தியாவுக்கு உதவுவதாக சேகரித்த நிதியை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறதா பாகிஸ்தான்?

Yuganthini by Yuganthini
2021/06/20
in இந்தியா
73 1
A A
0
இந்தியாவுக்கு உதவுவதாக சேகரித்த நிதியை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறதா பாகிஸ்தான்?
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொவிட் -19 நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவுவதற்காக பாகிஸ்தானுடன் இணைந்த தொண்டு நிறுவனங்கள், கோடிக்கணக்கில் நிதி திரட்டின. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணம், ஆர்ப்பாட்டங்களைத் தூண்டுவதற்கும் வெளிப்படையான பயங்கரவாத தாக்குதல்களுக்கு நிதியளிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

போலி செய்திகளையும் பிரச்சாரங்களையும் முறியடிக்கும் டிஸின்போலாபின் அறிக்கையின்படி, பாகிஸ்தானுடன் இணைந்த தொண்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் அமைந்துள்ளன. கொவிட் -19 நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ வேண்டும் என்ற போலிக்காரணத்தில் அவர்கள் பெரும் தொகையைச் சேகரித்தனர்.

அதாவது ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை வழங்க இந்தியாவுக்கு உதவுவதாகக் கூறி ‘ஹெல்ப் இந்தியா ப்ரீத்’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி, அவர்கள் நிதி உதவிக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இதன்போது மக்களும் இந்த அமைப்புகளுக்கு பணத்தை நன்கொடையாக வழங்கினர். ‘ஹெல்பிங் இந்தியா ப்ரீத்’ என்ற பெயரில் மில்லியன் கணக்கான டொலர்கள் திருடப்பட்டுள்ளன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த அறிக்கையை டிஸ்இன்ஃபோ ஆய்வகம் தயாரித்துள்ளது. அதற்கு ‘கொவிட் -19 மோசடி 2021’ என்று பெயரிடப்பட்டுள்ளது. டிஸ்இன்ஃபோ ஆய்வகம் மனிதாபிமான செலவினத்தின் அடிப்படையில் இந்த மோசடியை “மனித வரலாற்றில் மிக மோசமான மோசடிகளில் ஒன்று” என்று அழைத்தது.

மேலும் இந்த அறிக்கையின்படி, தொண்டு அமைப்புகள் தீவிர இஸ்லாமியவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளன. மேலும் அவை பாகிஸ்தான் இராணுவத்துடன் இணைந்து செயற்படுகின்றன என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பணத்தை திரட்டும் அமைப்புகளில் வட அமெரிக்காவின் இஸ்லாமிய மருத்துவ சங்கம் (IMANA) அடங்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 27, 2021 அன்று, இமானா இன்ஸ்டாகிராமில் # ஹெல்ப் இந்தியா ப்ரீத் பிரச்சாரத்தைத் தொடங்கி, ஆரம்ப இலக்கை 1.8 கோடி ரூபாயாக நிர்ணயித்ததாக கூறப்படுகின்றது

இதேவேளை குறுகிய காலத்தில் பெரிய தொகைகளைப் பெற்ற பிறகு, இலக்கு தொகையை அடிக்கடி திருத்தியது. எவ்வாறாயினும், அந்த அமைப்பு அது பெற்ற பணத்தின் சரியான அளவு குறித்து எந்த தகவலையும் கொடுக்கவில்லை. IMANA க்கு இந்தியாவில் அலுவலகமோ, கிளையோ அல்லது பிரதிநிதியோ இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் டிமான்ஃபோ ஆய்வக அறிக்கையில் இமானாவால் பெறப்பட்ட நன்கொடையின் மொத்த தொகை 30 கோடி ரூபாய் முதல் 158 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

டிஸ்இன்ஃபோ ஆய்வகம் குறைந்தது 66 பிரச்சாரங்களை ஒரே ஒரு மேடையின் வாயிலாக மேற்கொண்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்தியாவுக்கு உதவி என்ற பெயரில் பிரச்சாரத்திற்குப் பிறகு அவர்கள் பெற்ற பணத்தை அந்த அமைப்புகள் பகிர்ந்துக்கொண்டுள்ளன.

அதாவது இந்தியாவும் இந்தியர்களும் உலகெங்கிலும் பெற்றுள்ள நல்லெண்ணத்தை இந்த அமைப்புகள் சுரண்டின என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொவிட்-19 வழக்குகளில் இரண்டாவது பேரழிவுகரமான எழுச்சியின்போது இந்தியா மருத்துவ பொருட்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டது. நிலைமையை சமாளிக்க இந்திய அதிகாரிகளுக்கு உதவ பல நாடுகள் முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: கொவிட் 19தொண்டு நிறுவனங்கள்
Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமானப் படைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்!
இந்தியா

அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமானப் படைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்!

2022-06-24
அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு! ஓ.பி.எஸ். கோரிக்கையை நிராகரித்தது பொலிஸ் !!
இந்தியா

அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு! ஓ.பி.எஸ். கோரிக்கையை நிராகரித்தது பொலிஸ் !!

2022-06-22
அசாம் மாநிலத்தில் தொடரும் மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழப்பு
இந்தியா

அசாம் மாநிலத்தில் தொடரும் மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழப்பு

2022-06-19
ஒற்றைத் தலைமை விவகாம்: ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை
இந்தியா

ஒற்றைத் தலைமை விவகாம்: ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

2022-06-18
அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – ரயில்கள் தீக்கிரை!
இந்தியா

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – ரயில்கள் தீக்கிரை!

2022-06-17
அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம்
இந்தியா

புதிதாக 10 இலட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணியில் வேலை வாய்ப்பு – மோடி

2022-06-14
Next Post
பெல்ஜியத்தில் பாடசாலை கட்டிடத் தளம் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழப்பு !

பெல்ஜியத்தில் பாடசாலை கட்டிடத் தளம் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை !

31க்கு பின்னர் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்!

2022-05-25
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மீண்டும் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்!

2022-06-02
ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

2022-06-14
கோட்டாபய முன்னிலையில் இன்று மாலை ரணில் பிரதமராக பதவிப்பிரமாணம்?

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: தனியார் துறை ஊழியர்கள் குறித்தும் ஆராய்வு – ரணில்!

2022-05-26
தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட மாநாடு ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட மாநாடு ஆரம்பம்!

2022-06-25
அபிவிருத்திக்கென்று மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவும் நடைபெறவில்லை – மட்டு. மாநகர முதலவர்

அபிவிருத்திக்கென்று மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவும் நடைபெறவில்லை – மட்டு. மாநகர முதலவர்

2022-06-25

மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது – விசாரணை வேண்டும் என்கின்றார் பேராயர் !

2022-06-25
ஹட்டனில் மண்ணெண்ணெய்க்காக மக்கள் போராட்டம்!

ஹட்டனில் மண்ணெண்ணெய்க்காக மக்கள் போராட்டம்!

2022-06-25
அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!

2022-06-25

Recent News

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட மாநாடு ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட மாநாடு ஆரம்பம்!

2022-06-25
அபிவிருத்திக்கென்று மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவும் நடைபெறவில்லை – மட்டு. மாநகர முதலவர்

அபிவிருத்திக்கென்று மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவும் நடைபெறவில்லை – மட்டு. மாநகர முதலவர்

2022-06-25

மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது – விசாரணை வேண்டும் என்கின்றார் பேராயர் !

2022-06-25
ஹட்டனில் மண்ணெண்ணெய்க்காக மக்கள் போராட்டம்!

ஹட்டனில் மண்ணெண்ணெய்க்காக மக்கள் போராட்டம்!

2022-06-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.