சீனாவிடம் இருந்து சினோவாக் தடுப்பூசியைப் பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை சினோவாக் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என்று மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இதுபோன்ற எந்த முடிவும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சினோவாக் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதா, எந்த விலையில் அல்லது எத்தனை டோஸ்களில் கொள்வனவு செய்வது என்பது குறித்து இலங்கை இதுவரை முடிவு செய்யவில்லை என்று அவர் கூறினார்.
அவசர தேவைக்கான தடுப்பூசியை இலங்கை அங்கீகரித்திருந்தாலும் அது கொள்வனவு செய்யப்படும் என்று அர்த்தமல்ல என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.