• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு கொரோனா

இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படவில்லை – அமைச்சர் மஹிந்தானந்த

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/09/06
in இலங்கை, முக்கிய செய்திகள்
76 1
A A
0
43
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கக்கூடிய வகையில் அரசி, மரக்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் நாட்டில் உள்ளதாகவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அவசரகால பிரகடனம் தொடர்பான விசேட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஒகஸ்ட் 30 ஆம் திகதி அவசரகால பிரகடனம் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு 14 நாட்களுக்குள் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, இதனை நாடாளுமன்றின் ஊடாக செயற்படுத்த முடியும்.

இவ்வாறானதொரு சட்டம் நாட்டுக்குத் தேவையில்லை என்றால் இதனை நிறைவேற்றத் தேவையில்லை. அவசரகால சட்டம் கொண்டுவரப்படுவது ஒன்றும் இது புதிதல்ல. கடந்த காலங்களில் வெல்லம்பிட்டியவில் குப்பை மேடு சரிந்துவிழுந்த காலத்தில்கூட, நல்லாட்சியாளர்கள் அவசரகால சட்டத்தை கொண்டுவந்திருந்தார்கள்.

இன்று சர்வதேச செய்திகளில் இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு கிடையாது என்பதை நான் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். இங்கு உணவு மாபியாவே இடம்பெற்று வருகிறது.

இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த அவசரகாலப் பிரகடனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் எனும் ரீதியில் மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி உணவு வழங்க வேண்டியது எமது கடமையாகும். விவசாயத்துறை அமைச்சர் என்ற வகையில் நான் ஒன்றைக் கூற வேண்டும்.

கடந்த காலங்களில் இரண்டு போகத்தையும் சேர்த்து நாம் 8 இலட்சம் எக்டயாருக்கு நெற்பயிர்ச் செய்கை செய்துள்ளோம். 5.3 மில்லியன் மெட்ரிக் தொன் நெல்லை உற்பத்தி செய்துள்ளோம்.

இதனை 1.6 ஆல் பிரித்தால் 3.2 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி எம்மிடம் தற்போது உள்ளது. இதனால், இலங்கையில் ஒருபோதும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படவில்லை என்பதை நான் இங்கு உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.

இந்நிலையில், அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி இராணுவ ஆட்சிக்கு ஜனாதிபதி வழிவகுப்பதாக எதிர்க்கட்சியினர் கூறிவருகிறார்கள்.

ஆனால், கடந்த காலங்களில் எதிர்க்கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு போராட்டத்தையும் தண்ணீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டோ, தடியடி நடத்தியோ ஜனாதிபதி கட்டுப்படுத்தவில்லை. போராடிய எவரையும் கைது செய்யவில்லை. அவசரகால சட்டத்தை அன்றே கொண்டுவந்து ஜனாதிபதியால் போராட்டங்களை கட்டுப்படுத்திருக்க முடியும்.

ஆனால், அவர் அன்று அவ்வாறு செய்யவில்லை என்பதை எதிர்க்கட்சியினர் புரிந்துக் கொள்ள வேண்டும். அத்தோடு, இந்த அவசரகால சட்டமானது மக்களுக்காக கொண்டுவரப்பட்டது என்பதையும் இவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.” என கூறினார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது – க.மகேசன்

Next Post

போராட்டங்களை ஒடுக்கவே அவசரகாலச் சட்டம் – ரஞ்சித் மத்தும பண்டார

Related Posts

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

“எல்டோ தர்மே” என்பவரின் வாள் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 3 பேர் கைது!

2026-01-31
கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!
இலங்கை

கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

2026-01-31
கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இலங்கை

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

2026-01-31
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கை

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

2026-01-31
காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி
கிழக்கு மாகாணம்

காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி

2026-01-31
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கை

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

2026-01-31
Next Post
நாட்டின் வளங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி – ரஞ்சித் மத்தும பண்டார

போராட்டங்களை ஒடுக்கவே அவசரகாலச் சட்டம் - ரஞ்சித் மத்தும பண்டார

நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் போடப்படுமா? : எதிர்கட்சிகள் கேள்வி!

பிக்பொஸ் லொஸ்லியா நடித்துள்ள அறிமுகப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

பிக்பொஸ் லொஸ்லியா நடித்துள்ள அறிமுகப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

“எல்டோ தர்மே” என்பவரின் வாள் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 3 பேர் கைது!

0
கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

0
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

0
கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

0
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

“எல்டோ தர்மே” என்பவரின் வாள் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 3 பேர் கைது!

2026-01-31
கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

2026-01-31
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

2026-01-31
கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

2026-01-31
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

2026-01-31

Recent News

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

“எல்டோ தர்மே” என்பவரின் வாள் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 3 பேர் கைது!

2026-01-31
கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

2026-01-31
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

2026-01-31
கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

2026-01-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.