• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

பெருமளவான ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பாடசாலைக்கு சமூகம்!

1.062 Views
4 years ago
74 0
0
Share
Facebook Twitter WhatsApp
    Dhackshala Dhackshala
    0 Subscriber

    நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகளின் கற்றல் செயற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பெருமளவான மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர்.

    அதன்படி, மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1 முதல் 5 வரையிலான ஆரம்ப பிரிவு வரையில் கல்வி கற்கும் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் பாடசாலைக்குச் சமூகம் அளித்துள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

    அதிக எண்ணிக்கையான மாணவர்கள் பாடசாலை சீருடையுடனும் சில மாணவர்கள் சாதாரண ஆடையுடனும் பாடசாலைக்கு சமூகமளித்ததாக அவர் தெரிவித்தார்.

    பாடசாலைக்கு செல்லும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு பாடசாலை நுழைவாயிலில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மாணவர்களின் உடல் வெப்பம் அளவீடு செய்யப்பட்டதோடு, ஏனைய சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன.

    மேலும் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் பாடசாலைகளுக்கு முன் விசேட கடமையினை முன்னெடுத்து வருகின்றனர்.

    அதேவேளை, மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளிலும் தரம் 1 முதல் 5 வரையிலான ஆரம்பப் பிரிவு வரையில் கல்வி கற்கும் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் பாடசாலைக்குச் சமூகம் அளித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

    சுமார் 100 நாட்களுக்கும் மேலாக தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிபர், ஆசிரியர்களும் இன்று பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

    சில பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    முகக்கவசம் அணிதல், கை கழுதுவல், சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு மாணவர்களுக்கு பாடசாலை நுழைவாயிலில் வைத்தே தெளிவுபடுத்தப்படுவதுடன், மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தால் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதேபோல வவுனியா மாவட்டத்திலும் பாடசாலைகளுக்கு கணிசமான மாணவர்கள் வருகை தந்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

    சகல மாணவர்களும் சீருடை அணியாமல் சாதாரண சீருடையுடன் பாடசாலைக்கு வருகை தந்திருந்ததாகவும் பாடசாலை வாயிலில் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டதாவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

    அதிகளவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் இரு பிரிவுகளாக மாணவர்களை பாடசாலைக்கு வருமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

    அதேநேரம், யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலையில் மாணவர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன

    பாடசாலைக்கு வந்த மாணவர்களைக் கொண்டு கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    blank blank

    blank blank blank blank blank blank blank blank blank

    Related

    Category: இலங்கை பிரதான செய்திகள்
    Tags: பாடசாலைமாணவர்கள்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!
    மன்னாா்

    மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!

    2025-12-01
    வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு
    இலங்கை

    வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

    2025-12-01
    அனர்த்த நிலைமைக்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரின் பங்களிப்புடன் கூடிய நீண்டகால வலுவான நிதியம்!
    இலங்கை

    அனர்த்த நிலைமைக்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரின் பங்களிப்புடன் கூடிய நீண்டகால வலுவான நிதியம்!

    2025-12-01
    நடிகை சமந்தாவுக்கு நடந்த ரகசிய திருமணம்!
    சினிமா

    நடிகை சமந்தாவுக்கு நடந்த ரகசிய திருமணம்!

    2025-12-01
    காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு டிசம்பர் 25 வரை காலக்கெடு!
    இலங்கை

    காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு டிசம்பர் 25 வரை காலக்கெடு!

    2025-12-01
    வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்திய மக்களது உதவிக்கரம்!
    கிழக்கு மாகாணம்

    வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்திய மக்களது உதவிக்கரம்!

    2025-12-01
    Next Post
    அசலங்க- பானுக அபார துடுப்பாட்டம்: பங்களாதேஷை பந்தாடியது இலங்கை அணி!

    அசலங்க- பானுக அபார துடுப்பாட்டம்: பங்களாதேஷை பந்தாடியது இலங்கை அணி!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.