• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ரஷ்ய வங்கிகள், உலக நிதித் தொடர்புகளை இழந்து திவாலாகுமா?

ரஷ்ய வங்கிகள், உலக நிதித் தொடர்புகளை இழந்து திவாலாகுமா?

“நிதி அணு ஆயுதம்” என்கிற SWIFT தடை ரஸ்யாவை முடக்குமா? ரஸ்ய மக்கள் பதட்டம்!

KP by KP
2022/02/28
in உலகம், ஐரோப்பா
105 2
A A
0
47
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யா ஒரு புறம் உக்ரைனில் குண்டு பொழிய மறுபுறம் மேற்குலகம் ரஷ்யா மீது சரமாரியாகத் தடைகளைப் பொழிந்து தள்ளிவருகின்றது. அவற்றில் மிக உச்சமாக ரஷ்யாவை உலக வங்கிகளுக்கு இடையேயான நிதித் தொலைத்தொடர்பு வலைச் சமூகத்தில் இருந்து Society for Worldwide Interbank Financial Telecommunication – SWIFT) விலக்கி வைக்கும் முடிவுகளை ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா, , பிாித்தானியா போன்றவை வெளியிட்டுள்ளன. இதனையே “ஸ்விஃப்ட்” என்றுசுருக்கமாக அழைக்கிறார்கள்.

“தடைகளுக்கெல்லாம் தாய்” அல்லது “நிதி அணு ஆயுதம்” என்று இதனை மேற்கு நாடுகளது வல்லுநர்கள் கூறுகின்றனர். ஸ்விஃப்ட் தடையை அடுத்து ரஷ்யாவின் வங்கிகள் உலக நிதித் தொடர்புகளை இழந்து திவாலாகக் கூடும் என்ற அச்சம் அங்கு எழுந்துள்ளது.தங்கள் சேமிப்புக்களை வழித்துத் துடைத்து எடுத்துக்கொள்வதற்காக ரஷ்யர்கள்

வங்கிகளில் முண்டியடித்து வருகின்றனர்.

பணம் விநியோக இயந்திரங்களின் முன்பாக நீண்டவரிசைகள் தோன்றி உள்ளன. ரஷ்யாவின் மத்திய வங்கி அமைதி பேணுமாறு வங்கிகளது வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நிதி ஸ்திரத்தன்மையைப் பராமரிக்கவும், நிதித்துறையின் செயல்பாட்டு தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் தேவையான ஆதாரங்கள் மற்றும் கருவிகளை ரஷ்யா வங்கி தன் வசம் வைத்துள்ளது-என்று அது விடுத்த ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் பெறக்கூடிய போர் வெற்றியை விடவும் ஸ்விஃப்ட் தடை அடுத்து வரவுள்ள மாதங்களில் ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கி சர்வதேச அரங்கில்அதனை ஒரு மூலையில் முடக்கிவிடும்

🔴ஸ்விஃப்ட் (SWIFT) தடை என்றால்என்ன?

ஸ்விஃப்ட் (உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதித் தொலைத் தொடர்புக்கான சமூகம்) என்பது ஒரு உலகளாவிய நிதி இரத்த நாடி ஆகும். இது நாடு களது எல்லைகளுக்குள் சீரான மற்றும் விரைவான பணப் பரிமாற்றத்தை அனுமதிக்கிறது.

கிட்டத்தட்ட 200 நாடுகளில் உள்ள 11,000 க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் SWIFT ஐப் பயன்படுத்துகின்றன, சர்வதேச நிதிப் பரிமாற்ற அமைப்பின் முதுகெலும்பாக இதுவே உள்ளது.

முதன் முதலாக 1970 களில் நிறுவப்பட்டது. சர்வதேச நிதிச் செய்திச் சேவையை உருவாக்கும் லட்சியம் மற்றும் புதிய நோக்கு, சர்வதேச நிதிச்செய்திகளுக்கான பொதுவான மொழி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

பெல்ஜியத்தைத் தளமாகக் கொண்டு, பெல்ஜியத்தின் தேசிய வங்கியினால் ஸ்விஃப்ட் மேற்பார்வையிடப்பட்டு, அமெரிக்க சமஷ்டி ரிசேர்வ் வங்கி, இங்கிலாந்து வங்கி உட்பட உலகெங்கிலும் உள்ள முக்கிய மத்திய வங்கிகளுடன் ஒரு கூட்டமைப்பாகச் செயற்படுகிறது.

பெல்ஜியச் சட்டத்தின் கீழ், இது ஒரு கூட்டுறவு நிறுவனம்.நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே டிரில்லியன் கணக்கான டொலர்கள் கைமாறுவதால், SWIFT நாளொன்றுக்கு 40 மில்லியனுக்கும் அதிகமான செய்திகளைப் பரிமாறுகிறது.

அந்தச் செய்திகளில் 1% க்கும் அதிகமானவை ரஷ்யக் கட்டணங்களை உள்ளடக்கியது. ரஷ்யாவின் தேசிய ஸ்விஃப்ட் அமைப்பினது கூற்றுப்படி, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ரஷ்யா இரண்டாவது அதிக பயனர்களைக் கொண்டுள்ளது, சுமார் 300 ரஷ்ய நிதி நிறுவனங்கள் இந்த அமைப்பைச் சேர்ந்தவை. மேலும், ரஷ்யாவின் நிதி நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை SWIFT இல் உறுப்பினர்களாக உள்ளன.

எனவே, ரஷ்யாவை SWIFT இலிருந்து தடைசெய்வது, உலகின் பெரும்பாலான நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் ரஷ்யாவின் திறனை முடக்கி அதன் பொருளாதாரத்திற்குப் பெரும் அடியாக மாறும்.இதில் “பூமராங்” போன்று தடையைப் போட்டவர்களையே திருப்பித் தாக்கும்ஆபத்துகள் உண்டென்பதால் ஸ்விஃப்ட்விடயத்தில் மேற்கு நாடுகள் பிளவுபட்டுள்ளன.

ரஷ்யாவிடமிருந்து தடை போட்ட நாடுகளது நிறுவனங்களுக்கு வரவேண்டிய கடன்கள், கொடுப்பனவுகளையும் அது தடுத்துவிடும் அபாயம் இருக்கிறது.அதிபர் புடின் போரைத் தொடங்குதற்கு முன்னராகவே இது போன்ற மேற்குலக விளைவுகளை எதிர்பார்த்திருந்தவர் என்பதால் ஸ்விஃப்ட் தடைக்கு மாற்றாக ரஷ்யாவின் நிதி வலைப்பின்னல்களை சீர்குலைய விடாது தடுக்கும் மாற்று வசதிகளை ஏற்கனவே தயார்ப்படுத்தியுள்ளார் என்று மொஸ்கோவுக்கு ஆதரவான தரப்புகள் கூறுகின்றன.-

——————————————————————–

பாரிஸிலிருந்து குமாரதாஸன். 27-02-2022

 

Related

Tags: Russiaswiftஉக்ரைன்பொருளாதார தடையுத்தம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேற்கின் ஆயுதக் குவிப்பு – ‘SWIFT’தடைக்கு பதிலளித்தது ரஷ்யா!

Next Post

249 இந்தியர்களுடன் மற்றுமோர் விமானம் இந்தியா வந்தது!

Related Posts

ஒக்டோபரில் ஹேக் செய்யப்பட்ட இங்கிலாந்தின் வெளிவிவகார  அலுவலகம்!
இங்கிலாந்து

ஒக்டோபரில் ஹேக் செய்யப்பட்ட இங்கிலாந்தின் வெளிவிவகார அலுவலகம்!

2025-12-19
செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு – இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை!
இங்கிலாந்து

செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு – இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை!

2025-12-19
இலங்கையின் பேரிடர் மீட்பு பணிக்கு 1.8 மில்லியன் யூரோவை ஒதுக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!
உலகம்

அவசர நிதித் தேவைகளுக்காக உக்ரேனுக்கு 90 பில்லியன் யூரோவை கடனாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்!

2025-12-19
பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம்!
ஆசிரியர் தெரிவு

பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம்!

2025-12-19
இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்
இலங்கை

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

2025-12-18
சிறுவர்களிடம் பெண் வெறுப்பின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய இங்கிலாந்து ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி!
இங்கிலாந்து

சிறுவர்களிடம் பெண் வெறுப்பின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய இங்கிலாந்து ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி!

2025-12-18
Next Post
இலங்கை விமானங்கள் துருக்கியில் தரையிறங்கத் தடை!

249 இந்தியர்களுடன் மற்றுமோர் விமானம் இந்தியா வந்தது!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை – இலங்கை குறித்து 3ஆம் திகதி உரையாடல்!

ஐ.நா கூட்டத்தொடரின் 49ஆவது அமர்வு இன்று ஆரம்பம்!

இன்றும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் மின்வெட்டு!

நாட்டில் இன்று 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

2025-11-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
சர்வதேச நாணய நிதியம்-இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

அவசர நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி!

0
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 4.2 பில்லியன் ரூபா நிதி உதவி!

0
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

0
சர்வதேச நாணய நிதியம்-இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

அவசர நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி!

2025-12-19
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 4.2 பில்லியன் ரூபா நிதி உதவி!

2025-12-19
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

2025-12-19
சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

2025-12-19
திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

2025-12-19

Recent News

சர்வதேச நாணய நிதியம்-இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

அவசர நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி!

2025-12-19
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 4.2 பில்லியன் ரூபா நிதி உதவி!

2025-12-19
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

2025-12-19
சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

2025-12-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.