பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-ஆல் சில செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான விளம்பரங்களை நிறுத்தி வைப்பது குறித்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-குவைத் தலைவர் சவுத்ரி பெர்வைஸ் இலாஹி கவலை தெரிவித்ததால், பாகிஸ்தானில் ஊடகங்கள் இம்ரான் கான் அரசாங்கத்தால் ஒடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-குவைட் இம்ரான் கான் அரசாங்கத்தின் நட்புத்தரப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) அரசாங்கம் சில ஊடக நிறுவனங்களை ஏன் குறிவைக்கிறது என்பது குறித்து தனக்குத் தெரியவில்லை என்று கூறிய எலாஹி தனது ஆலோசகர்களிடம் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு பிரதமர் இம்ரான் கானுக்கு அறிவுறுத்தினார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி டொக்டர் ஆரிஃப் அல்வி, மின்னணு குற்றங்கள் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அவசரச் சட்டத்தை பெப்ரவரி 20ஆம் திகதி அன்று வெளியிட்டார். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு ஊடகத்துறை சங்கங்களும் கடுமையான தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
அதேநேரம், இச்சட்டத்திற்கு எதிராக பாகிஸ்தான் ஃபெடரல் யூனியன் ஒஃப் ஜேர்னலிஸ்ட்ஸ், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
அதில், தேவையான நிபந்தனைகள் அரசாங்கத்தால் பூர்த்தி செய்யப்படாததால், அவசரச் சட்டத்தை வெளியிடுவது தவறான அடிப்படையிலானது என்று குறிப்பிட்டுள்ளது.
கருத்துச் சுதந்திரம் ஜனநாயகத்தின் அழகு என்று குறிப்பிடும் இலாஹி பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்பின் உறுப்பினர்கள் சிலர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க கட்சியால் தடை விதிக்கப்பட்டதாக கூறியதோடு தனது கவலையையும் வெளிப்படுத்தினார்.
இது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்க்கு அதன் சமநிலையான பார்வையை பொதுமக்களுக்கு முன்வைக்க முடியாத வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, குறித்த புதிய சட்டத்தின் கீழ், ‘நபர்’ என்பதன் வரையறையானது எந்தவொரு நிறுவனம், சங்கம், நிறுவனம், அமைப்பு, அதிகாரம் அல்லது வேறு எதையும் உள்ளடக்கும் வகையில் குறத்த சட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒரு நபரின் ‘அடையாளத்தை’ தாக்கியதாகக் கண்டறியப்பட்ட எவருக்கும் இப்போது மூன்று ஆண்டுகளுக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் அல்லது வேறு எந்தச் சட்டத்தின் கீழ் எந்தப் பதவியையும் வகிக்கும் எந்தவொரு நபரும் ‘எந்தப் பகுதியிலும் அல்லது தொகுதியிலும’ பொதுக் கூட்டங்களுக்குச் செல்லவோ அல்லது உரையாற்றவோ அனுமதிக்கும் வகையில், நாட்டின் தேர்தல் சட்டங்களைத் திருத்துவதற்கு மற்றொரு அவசரச் சட்டம் கையொப்பமிடப்பட்டது. மத்திய புலனாய்வு அமைப்பின் வரம்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.