• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
போலியான ஆவணங்களைத் தயாரித்து 68 மில்லியன் ரூபாய் கடன்!

போலியான ஆவணங்களைத் தயாரித்து 68 மில்லியன் ரூபாய் கடன்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/03/25
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
75 1
A A
0
35
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

போலியான ஆவணங்களைத் தயாரித்தும், போலியான தகவல்களை முன்வைத்தும் 47 பேர் 2017ஆம் ஆண்டில் அரச ஈட்டு முதலீட்டு வங்கியில் 68 மில்லியன் ரூபாய் கடன்களைப் பெற்றுக் கொண்டமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) புலப்பட்டுள்ளது.

கடன் பெற்றவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருப்பதுடன், இது தொடர்பில் இன்னமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குழுவிற்கு சமுகமளித்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக இது தொடர்பில் பணியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், இதனுடன் தொடர்புபட்ட வெளிநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்ட பின்னர் குறித்த கடனை மீள வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு கோப் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் 2017 மற்றும் 2018 நிதி ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கும் நோக்கில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தலைமையில் கூடியபோதே இவ்விடயங்கள் வெளிக்கொணரப்பட்டன.

அதேநேரம், இவ்வருடங்களில் வீட்டுக் கடன்கள் அதிகம் வழங்கப்பட்டமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், கைத்தொழில் மற்றும் விவசாயத்துக்கு வழங்கப்படும் கடன்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என இங்கு சமுகமளித்திருந்த குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் நோக்கம் இதுவே என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் கவனம் செலுத்தி சிறிய தொழில்முயற்சிகள் பலவற்றுக்கு ஏற்கனவே கடன் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வங்கியில் தற்பொழுது காணப்படும் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், நிறைவேற்றுத் தரத்தில் காணப்படும் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதும், சில நிறைவேற்றுத்தர பதவிகளுக்கு பொருத்தமான விண்ணப்பதாரிகள் விண்ணப்பிப்பதில்லையென்றும், ஒரு சிலர் நியமனங்களைப் பெற்று சிறிது காலத்தில் விலகிச் செல்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பதவிகளுக்கான சம்பளம் போதுமானதாக இல்லையாயின் அதில் திருத்தங்களைக் கொண்டுவந்து வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

அரச ஈட்டு முதலீட்டு வங்கி 30 வருடங்களாக வாடகைக்குப் பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டடத்தில் இயங்கி வருவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

தானியங்கி வங்கி அமைப்பை அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

Related

Tags: கோப் குழுபோலி தகவல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சஜித் பிரேமதாசவிற்கு அரசியமைப்பு குறித்து தெரியாது – சுமந்திரன் சாடல்!

Next Post

பேச்சு என்ற பெயரில் நாம் ஏமாறத் தயாரில்லை – இரா.சம்பந்தன்

Related Posts

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்
இலங்கை

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

2026-01-15
சிறிதரன் எம்.பியைச் சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்
இலங்கை

சிறிதரன் எம்.பியைச் சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

2026-01-15
எலோன் மஸ்க்கின் க்ரோக்கிற்கு தடை விதித்த இந்தோனேசியா, மலேசியா!
இங்கிலாந்து

இங்கிலாந்தின் எச்சரிக்கையை அடுத்து Grok AI நிஜ மனிதர்களின் படங்களை தவறாக சித்தரிப்பதைத் தடுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது!

2026-01-15
குருக்கள்மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்
இலங்கை

குருக்கள்மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

2026-01-15
யாழில். சூட்கேசில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்
இலங்கை

யாழில். சூட்கேசில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்

2026-01-15
பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள நீதித்துறை சீர்திருத்தங்கள் – அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பு!
இங்கிலாந்து

பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள நீதித்துறை சீர்திருத்தங்கள் – அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பு!

2026-01-15
Next Post
மூன்று வருடங்களின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – ஜனாதிபதி நாளை சந்திப்பு

பேச்சு என்ற பெயரில் நாம் ஏமாறத் தயாரில்லை - இரா.சம்பந்தன்

எரிபொருள் விலையேற்றம் – துவிச்சக்கர வண்டியில் பிரதேசசபை அமர்வுக்கு சென்ற உறுப்பினர்கள்!

எரிபொருள் விலையேற்றம் - துவிச்சக்கர வண்டியில் பிரதேசசபை அமர்வுக்கு சென்ற உறுப்பினர்கள்!

ரஷ்யாவின் பிரமாண்டமான போர்க்கப்பலை அழித்துள்ளதாக உக்ரைன் அறிவிப்பு!

ரஷ்யாவின் பிரமாண்டமான போர்க்கப்பலை அழித்துள்ளதாக உக்ரைன் அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

0
எலோன் மஸ்க்கின் க்ரோக்கிற்கு தடை விதித்த இந்தோனேசியா, மலேசியா!

இங்கிலாந்தின் எச்சரிக்கையை அடுத்து Grok AI நிஜ மனிதர்களின் படங்களை தவறாக சித்தரிப்பதைத் தடுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது!

0
சிறிதரன் எம்.பியைச் சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

சிறிதரன் எம்.பியைச் சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

0
குருக்கள்மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

குருக்கள்மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

0
பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள நீதித்துறை சீர்திருத்தங்கள் – அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பு!

பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள நீதித்துறை சீர்திருத்தங்கள் – அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பு!

0
செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

2026-01-15
சிறிதரன் எம்.பியைச் சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

சிறிதரன் எம்.பியைச் சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

2026-01-15
எலோன் மஸ்க்கின் க்ரோக்கிற்கு தடை விதித்த இந்தோனேசியா, மலேசியா!

இங்கிலாந்தின் எச்சரிக்கையை அடுத்து Grok AI நிஜ மனிதர்களின் படங்களை தவறாக சித்தரிப்பதைத் தடுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது!

2026-01-15
குருக்கள்மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

குருக்கள்மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

2026-01-15
யாழில். சூட்கேசில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்

யாழில். சூட்கேசில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்

2026-01-15

Recent News

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

2026-01-15
சிறிதரன் எம்.பியைச் சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

சிறிதரன் எம்.பியைச் சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

2026-01-15
எலோன் மஸ்க்கின் க்ரோக்கிற்கு தடை விதித்த இந்தோனேசியா, மலேசியா!

இங்கிலாந்தின் எச்சரிக்கையை அடுத்து Grok AI நிஜ மனிதர்களின் படங்களை தவறாக சித்தரிப்பதைத் தடுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது!

2026-01-15
குருக்கள்மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

குருக்கள்மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

2026-01-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.