• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

பெரும்பான்மையை தக்கவைக்க பஷில் கடும் பிரயத்தனம் – கொழும்பில் தொடர் பேச்சுகள் முன்னெடுப்பு?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/04/05
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
117 1
A A
0
வைரசுக்கு எதிரான போரில் அரசாங்கம் தோல்வி??
51
SHARES
1.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பான்மையை வைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பஷில் ராஜபக்ச ஆகியோர் தொடர் பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில் சுயாதீனமாக இயங்குவார்கள் என இன்று(செவ்வாய்கிழமை) அறிவிக்கப்பட்ட 43 பேரில் மூவர், தாம் இன்னும் அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை என அறிவித்துள்ளனர்.

அருந்திக்க பெர்ணாண்டோ (அனுர பிரியதர்சன யாப்பா அணி), ரொஷான் ரணசிங்க (அனுர பிரியதர்சன யாப்பா அணி), கயான் (விமல் அணி) ஆகிய மூவரே இவ்வாறு அறிவித்துள்ளனர்.

அரசிலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ரிஷாட் கட்சி ஊடாக நாடாளுமன்றம் தெரிவான முஷாரப் சுயாதீனமாக இயங்கப்போவதாக இன்று சபையில் அறிவித்தார்.

ஆனால் இசாக் ரஹ்மான், அலி சப்ரி ஆகியோர் தமது முடிவுகளை அறிவிக்கவில்லை.

அதேபோன்று முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும், தற்போது மௌனம் காத்துவருகின்றனர்.

எதிரணியில் இருந்து 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட அரவிந்தகுமார், டயானா ஆகியோரும் தமது முடிவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனவே, இவர்களின் ஆதரவும் தமக்குதான் என அரசாங்கம் கருதுகின்றது.

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட மொட்டு கட்சிக்கு 17 போனஸ் ஆசனங்கள் சகிதம் 145 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. பங்காளிகளின் ஆதரவு கிடைத்தது. 20 ஐ ஆதரித்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேசக்கரம் நீட்டினர்.

இதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 145, ஈபிடிபி – 02, தேசிய காங்கிரஸ் – 01, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – 01, எமது மக்கள் சக்தி – 01, ஶ்ரீங்கா சுதந்திரக்கட்சி – 01, முஸ்லிம் காங்கிரஸ் – 04, மக்கள் காங்கிரஸ் – 02, அலிசப்ரி (புத்தளம்) – 01, அரவிந்தகுமார் – 01, டயானா – 01 என அரசாங்கத்திற்கு ஆதரவாக (சபாநாயகர்தவிர) நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் இருந்தன.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கபோவதாக இன்று 40 பேர் அறிவித்தனர். (முடிவை மாற்றிய மூவர் உள்ளடக்கப்படவில்லை.)

எனவே 159 – 40 = 119, விஜயதாச ராஜபக்ச ஏற்கனவே ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளார். 119 – 01 = 118, இதில் சுயாதீனமாக செயற்படபோவதாக முஷாரப் இன்று அறிவித்தார்.

இதன்காரணமாக 118 – 01  = 117, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவு இன்னும் வெளியாகவில்லை.  அரசுக்கு ஆதரவு வழங்கக்ககூடாதென கிழக்கு மாகாண மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.

மக்கள் கோரிக்கையை அவர்கள் ஏற்றால் 117 – 04 = 113, அரவிந்தகுமார், அலி சப்ரி, இசாக் ரஹ்மான் ஆகியோர் சுயாதீனமாக இயங்கும் முடிவை எடுத்தால்  113 -03 = 110 அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்துவிடும்.

அரசு கூறுவதுபோல இவர்களின் ஆதரவு தொடர்ந்தால் சாதாரண பெரும்பான்மை தக்கவைத்துக்கொள்ளப்படும்.

அதேவேளை, நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளையும், நாளை மறுதினமும் விவாதம் இடம்பெறவுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Tags: அரசாங்கம்அரசியல் கட்சி பிரமுகர்பிரதமர்ஜனாதிபதி
Share20Tweet13Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!
இலங்கை

அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!

2022-05-22
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் யாழ் மக்கள் !
இலங்கை

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் யாழ் மக்கள் !

2022-05-22
கஞ்சியும் செல்ஃபியும் – நிலாந்தன்.
இலங்கை

கஞ்சியும் செல்ஃபியும் – நிலாந்தன்.

2022-05-22
அவுஸ்ரேலிய பிரதமராக அந்தனி அல்பனிஸ் தெரிவு
அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலிய பிரதமராக அந்தனி அல்பனிஸ் தெரிவு

2022-05-22
டெல்லி கப்பிட்டல்ஸ் அணி தோல்வி : மும்பை அணியின் வெற்றியால் பிளே ஒப்க்குள் நுழைந்தது பெங்களூர் !
கிரிக்கெட்

டெல்லி கப்பிட்டல்ஸ் அணி தோல்வி : மும்பை அணியின் வெற்றியால் பிளே ஒப்க்குள் நுழைந்தது பெங்களூர் !

2022-05-22
ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள்!!!
இலங்கை

ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள்!!!

2022-05-22
Next Post
மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட அறிவிப்பு !

அவசரகால சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
edit post
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
edit post
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
edit post
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
edit post
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

2022-05-11
edit post
அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!

அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!

2022-05-22
edit post
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் யாழ் மக்கள் !

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் யாழ் மக்கள் !

2022-05-22
edit post
கஞ்சியும் செல்ஃபியும் – நிலாந்தன்.

கஞ்சியும் செல்ஃபியும் – நிலாந்தன்.

2022-05-22
edit post
கட்சியை வலுப்படுத்த வருமாறு நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

கட்சியை வலுப்படுத்த வருமாறு நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

2022-05-22
edit post
அவுஸ்ரேலிய பிரதமராக அந்தனி அல்பனிஸ் தெரிவு

அவுஸ்ரேலிய பிரதமராக அந்தனி அல்பனிஸ் தெரிவு

2022-05-22

Recent News

edit post
அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!

அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!

2022-05-22
edit post
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் யாழ் மக்கள் !

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் யாழ் மக்கள் !

2022-05-22
edit post
கஞ்சியும் செல்ஃபியும் – நிலாந்தன்.

கஞ்சியும் செல்ஃபியும் – நிலாந்தன்.

2022-05-22
edit post
கட்சியை வலுப்படுத்த வருமாறு நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

கட்சியை வலுப்படுத்த வருமாறு நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

2022-05-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.