• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஜனாதிபதியுடன் சந்திப்பு – விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்?

எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குங்கள் – ஜனாதிபதி கோரிக்கை!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/04/25
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
122 2
A A
0
59
SHARES
1.8k
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று(திங்கட்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், “நாட்டில்  தற்போது ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை விரைவில் தீர்ப்பது தொடர்பாக, மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகள் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாக,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமூக,  பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் உடனடியாக தீர்ப்பது தொடர்பில் 04.20.2022ஆம் திகதியிடப்பட்டு எனக்கும், பிரதமருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பிய கடிதம் தொடர்பில்

நீங்கள் முன்பு எனக்கு அனுப்பிய, அதாவது ஏப்ரல் 4, 2022 அன்று சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் உள்ளடக்கத்தை நான் எந்த வகையிலும் புறக்கணிக்கவில்லை என்பதை முதலில் மரியாதையுடனும், அன்புடனும் ஒப்புக்கொள்கிறேன்.

நீங்கள் சுட்டிக் காட்டியது போல், நாட்டில் ஏற்பட்டுள்ள உடனடி பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நாங்கள் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

மக்கள் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி நான் புரிந்து கொள்ளாமல் இல்லை. தினசரி, புள்ளி விவரங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நிபுணர்களின் உதவியுடன் நான் அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்றுவேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதன்படி, பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு, மருந்து, வீட்டு எரிவாயு மற்றும் பல்வேறு எரிபொருள்கள் வழங்குவதற்கான திட்டங்கள் ஏற்கனவே தீவிர கண்காணிப்பில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, என்னால் நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சர், மத்திய வங்கியின் புதிய ஆளுநர் மற்றும் திறைசேரியின் புதிய செயலாளர் ஆகியோர் சர்வதேச நிதி நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ், சம்பந்தப்பட்ட சர்வதேச நிதி நிறுவனங்களுடனும் நட்பு நாடுகளுடனும் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்து வருகின்றனர்.

இதன் விளைவாக, “சர்வதேச நாணய நிதியம்” மற்றும் இந்திய அரசு ஏற்கனவே நேர்மறையான பதிலை அளித்துள்ளதுடன், மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அடுத்த சில வாரங்களில் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை எதிர்வரும் சில வாரங்களில் தற்காலிக தீர்வுக்கு செல்ல முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நான் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்க சட்ட நிபுணர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. குழுவின் உறுப்பினர்கள்:

ஜனாதிபதி சட்டத்தரணி திரு.ரொமேஷ் டி சில்வா – தலைவர்

ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜி.எச். பீரிஸ்

நீதிபதி திரு. ஏ. டபிள்யூ.ஏ. சலாம்

ஜனாதிபதி சட்டத்தரணி திரு. மனோகார டி சில்வா

ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்தன

ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சமந்த ரத்வத்தே

பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன்

பேராசிரியர் டபிள்யூ. செனவிரத்ன

ஜனாதிபதி சட்டத்தரணி திரு. நவீன் மாரப்பன

திருமதி கௌசல்ய மொல்லிகொட – செயலாளர்

இந்தக் குழு சுமார் இரண்டு வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு குழுக்கள் மற்றும் நிபுணர்களுடன் விரிவாக கலந்துரையாடி புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான வரைவுகளை தயாரித்து வருகின்றது. அந்த வரைவுகள் தயாரிக்கப்பட்டு  நிறைவு செய்யப்பட்டு வருவதாகவும் குழு எனக்கு தெரிவித்துள்ளது.

இவ்வாறாக தயாரிக்கப்பட்ட வரைபு கிடைக்கப்பெற்றவுடன் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகாரத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வரைவின் நகலை உங்களுக்கு அனுப்புகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் நான் உறுதியாக உள்ளேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு நான் ஆதரவளிப்பதாகவும், பாராளுமன்றத்தில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஜனாதிபதியும் பாராளுமன்றமும் இணைந்து அத்தகைய திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அன்புடன் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

மேலும் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு தமது பங்களிப்புகளை எதிர்பார்த்து அனைத்துக் கட்சி மாநாட்டிற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டும், அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்டு நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் இருந்து மீட்டெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தூய்மையான எண்ணத்துடன் விடுக்கப்பட்ட  கோரிக்கைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதும் வருத்தமளிக்கிறது.  இருப்பினும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எனது அழைப்பு அவ்வாறே உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் என்ன செய்தாலும், அனைத்து செயல்முறைகளும் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் மற்றும் தற்போதைய அரசியலமைப்பிற்குள் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே, உங்களது முன்மொழிவுகளையோ அல்லது மக்களின் அபிலாஷைகளையோ நானோ அல்லது எமது அரசாங்கமோ எக்காலத்திலும் புறக்கணிக்கமாட்டோம் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.

அமைச்சரவை இல்லாமல் ஒரு நாட்டின் நிர்வாகத்தை நடத்த முடியாது. மேலும், அமைச்சரவை இல்லாதது நடைமுறைச்சாத்தியமற்றது. அதன்படி, மூத்த அமைச்சர்களின் உதவியுடன் பெரும்பான்மையான இளம் உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை நான் நியமித்தேன்.

மக்களின் தற்போதைய பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வைக் காண்பதற்காக குறுகிய காலத்திற்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன என்பதை நான் மரியாதையுடன் குறிப்பிடுகிறேன்.

எனது பதவிக்காலத்தின் இரண்டரை வருடங்களில், பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு இனக்குழுக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் போன்றவற்றில் நான் தடியடியோ, கண்ணீர்ப்புகையோ பிரயோகிக்கவில்லை. பொதுவாக இவ்வாறான போராட்டங்களை நசுக்குவதற்கு எமது அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். எனது அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை / ஆயுதப் படைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என்பதை மரியாதையுடன் நினைவுபடுத்துகிறேன்.

19.04.2022 அன்று பொதுமக்கள் போராட்டத்தின் போது நடந்த சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன், மேலும் இது குறித்து முறையான விசாரணை நடத்த பல குழுக்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த விசாரணைகள் முடிந்தவுடன் அதுபற்றி உங்களுக்கு அறிவிக்கவும் எதிர்பார்க்கின்றேன்.

நீங்கள் கூறியது போல், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்திலும் உங்களின் ஆலோசனை மற்றும் அறிவுரைகளை மரியாதையுடன் எதிர்பார்க்கிறேன்.

தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், எமது நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நீங்கள் முன்மொழிந்தால், எனது முழு ஆதரவையும் வழங்குவேன் என்பதை நான் மரியாதையுடன் நினைவு கூர்கிறேன்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: கால அவகாசம்கோட்டாபய ராஜபக்ஷகோரிக்கைஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாயினை வழங்குகின்றது இத்தாலி!

Next Post

அமைச்சரவையின் உப பேச்சாளர்களாக இருவர் நியமனம்

Related Posts

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் சேட்டை புரிந்த தந்தைக்கு விளக்கமறியல்

2026-01-16
தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு ஒரு சட்டமும் இந்த நாட்டில் இருப்பது ஏன் –  சீலரத்ன தேரர்
இலங்கை

தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு ஒரு சட்டமும் இந்த நாட்டில் இருப்பது ஏன் – சீலரத்ன தேரர்

2026-01-16
மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட பட்டிப்பொங்கல் பூஜை வழிபாடுகள்
இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட பட்டிப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

2026-01-16
மருதமுனையில் டெங்கு அபாயம்! சில வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அம்பாறை

மருதமுனையில் டெங்கு அபாயம்! சில வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

2026-01-16
எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் முன்நிலையாகுமாறு இளங்குமரன் MP அழைப்பாணை !
இலங்கை

எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் முன்நிலையாகுமாறு இளங்குமரன் MP அழைப்பாணை !

2026-01-16
இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின்  புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோரி போராட்டம்!
இலங்கை

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோரி போராட்டம்!

2026-01-16
Next Post
அமைச்சரவையின் உப பேச்சாளர்களாக இருவர் நியமனம்

அமைச்சரவையின் உப பேச்சாளர்களாக இருவர் நியமனம்

காணி அபகரிப்பு குறித்து ஐ.நா. ஆணையாளருக்கு அறியப்படுத்த வேண்டியது அவசியம் – சி.வி.

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு - சி.வி.விக்னேஸ்வரன்

மக்கள் எழுச்சிப் போராட்டம் 18ஆவது நாளாகவும் தொடர்கிறது – அலரிமாளிகைக்கு முன்பாகவும் இரவிரவாக போராட்டம்!

மக்கள் எழுச்சிப் போராட்டம் 18ஆவது நாளாகவும் தொடர்கிறது - அலரிமாளிகைக்கு முன்பாகவும் இரவிரவாக போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
வா வாத்தியார் திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா?

வா வாத்தியார் திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா?

0
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் சேட்டை புரிந்த தந்தைக்கு விளக்கமறியல்

0
கனேடிய பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு விஜயம் செய்ய தீர்மானம்!

கனேடிய பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு விஜயம் செய்ய தீர்மானம்!

0
தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு ஒரு சட்டமும் இந்த நாட்டில் இருப்பது ஏன் –  சீலரத்ன தேரர்

தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு ஒரு சட்டமும் இந்த நாட்டில் இருப்பது ஏன் – சீலரத்ன தேரர்

0
மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட பட்டிப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட பட்டிப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

0
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் சேட்டை புரிந்த தந்தைக்கு விளக்கமறியல்

2026-01-16
வா வாத்தியார் திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா?

வா வாத்தியார் திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா?

2026-01-16
தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு ஒரு சட்டமும் இந்த நாட்டில் இருப்பது ஏன் –  சீலரத்ன தேரர்

தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு ஒரு சட்டமும் இந்த நாட்டில் இருப்பது ஏன் – சீலரத்ன தேரர்

2026-01-16
கனேடிய பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு விஜயம் செய்ய தீர்மானம்!

கனேடிய பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு விஜயம் செய்ய தீர்மானம்!

2026-01-16
மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட பட்டிப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட பட்டிப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

2026-01-16

Recent News

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் சேட்டை புரிந்த தந்தைக்கு விளக்கமறியல்

2026-01-16
வா வாத்தியார் திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா?

வா வாத்தியார் திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா?

2026-01-16
தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு ஒரு சட்டமும் இந்த நாட்டில் இருப்பது ஏன் –  சீலரத்ன தேரர்

தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு ஒரு சட்டமும் இந்த நாட்டில் இருப்பது ஏன் – சீலரத்ன தேரர்

2026-01-16
கனேடிய பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு விஜயம் செய்ய தீர்மானம்!

கனேடிய பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு விஜயம் செய்ய தீர்மானம்!

2026-01-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.