உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலுள்ள வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளுக்கு மாத்திரமே பெற்றோல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஐஓசி நிறுவனத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய லங்கா ஐஓசி நிரப்பு நிலையங்களில் கேன்கள், கொள்கலன்கள் அல்லது போத்தல்களில் பெற்றோல் வழங்கப்படாது எனவும் லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.

















