• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் ஜனாதிபதியின் முயற்சிக்கு பிரித்தானிய பிரதமர் பாராட்டு

நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் ஜனாதிபதியின் முயற்சிக்கு பிரித்தானிய பிரதமர் பாராட்டு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/09/02
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
72 0
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு முன்னுரிமையளிக்கும், அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ள முயற்சிகளுக்கு பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றமைக்கு வாழ்த்துத் தெரிவித்து அனுப்பியுள்ள செய்தியிலேயே பிரித்தானியப் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கொள்கைகளை பின்பற்றுவது, ஜனநாயக இணக்கப்பாட்டை எட்டுவது என்பன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் கரிசனையை மீளவலியுறுத்தியுள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன், நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார, சமூக சவால்களுக்கு மத்தியில், பிரித்தானியா, இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் மிக விரைவில் உங்களால் முன்னேற்றத்தைக் காண முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

இவ்விடயத்தில் இலங்கைக்கு உதவ, எமது சர்வதேச பங்குதாரர்களுடன் பிரித்தானியா இணைந்து செயற்பட காத்திருக்கின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் நிலையான மற்றும் கணிசமான முன்னேற்றத்தை அடைவதற்கு, இரண்டு அரசாங்கங்களும் இணைந்து செயற்பட முடியும் எனவும் பிரித்தானிய பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு, அணுகுமுறை மாற்றத்துடனான இலங்கையின் மனித உரிமைச் சான்றுகளை நிரூபிக்க இலங்கை அரசாங்கத்துக்கு சிறந்த தருணமாக இருக்கும்.
இந்த விடயங்களில் அனைவரும் உணரக்கூடிய உண்மையான முன்னேற்றத்தை உருவாக்க, பிரித்தானியாவும், சர்வதேச சமூகமும், இலங்கையுடன் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது.

அண்மையில் அறிவிக்கப்பட்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தக திட்டம் தொடர்பில் சுட்டிக்காட்டிய பிரித்தானிய பிரதமர், இத்திட்டத்தின் மூலம் இலங்கை ஏற்றுமதி செய்யும் மொத்த பொருட்களின் பெரும்பகுதிக்கு, வரிச் சலுகை அணுகுமுறை மூலம் பயனடைவதற்கான வாய்ப்பு கிட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எமது இருதரப்பு உறவை பலப்படுத்துவதன் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றை மேலும் மேம்படுத்துவதற்கான பல வாய்ப்புக்களை நாம் கண்டறிய முடியும்.

பசுமை பொருளாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு மூலம், இலங்கைக்கு ஆதரவு வழங்குவதற்கான உறுதியான சந்தர்ப்பங்கள் பிரித்தானியாவிடம் உள்ளதென நான் நம்புகிறேன் எனவும் பிரித்தானிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த மே மாதம் காலநிலை மாற்றம் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் தாம் அடைய எதிர்பார்த்திருக்கும் இலக்குகளை பரிமாறிக் கொண்டமை தொடர்பிலும் பிரித்தானிய பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ள நிலையில், பிரித்தானியா – இலங்கை இடையிலான உறவு மென்மேலும் பலமடையுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related

Tags: பாராட்டுபிரித்தானிய பிரதமர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு மக்கள் ஆணை அவசியம் – அனுர

Next Post

Breaking news: இடைக்கால வரவு செலவுத் திட்டம் 115 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

Related Posts

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
இலங்கை

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

2025-12-23
இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார்  எஸ்.ஜெய்சங்கர்
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

2025-12-23
ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!
இலங்கை

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

2025-12-23
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!
இலங்கை

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

2025-12-23
2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!
இங்கிலாந்து

2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!

2025-12-23
இலங்கைக்கான 450 மில்லியன் டொலர் மீள்கட்டமைப்பு தொகுப்பை அறிவித்த இந்தியா!
இலங்கை

இலங்கைக்கான 450 மில்லியன் டொலர் மீள்கட்டமைப்பு தொகுப்பை அறிவித்த இந்தியா!

2025-12-23
Next Post
Breaking news: ஜனாதிபதியின் அதிகாரங்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு – வர்த்தமானி வெளியானது!

Breaking news: இடைக்கால வரவு செலவுத் திட்டம் 115 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

இயற்கை ஆபத்திலும் கூட ராஜபக்ஷ குடும்பத்தினர் பாதுகாக்கப்படுவர்- சஷிந்திர

Breaking news: நாடு திரும்பினார் கோட்டா!

இலங்கை பொலிஸின் 156 ஆவது ஆண்டு  பூர்த்தி

இலங்கை பொலிஸின் 156 ஆவது ஆண்டு பூர்த்தி

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

0
இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார்  எஸ்.ஜெய்சங்கர்

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

0
ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

0
சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

2025-12-23
இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார்  எஸ்.ஜெய்சங்கர்

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

2025-12-23
ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

2025-12-23
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

2025-12-23
2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!

2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!

2025-12-23

Recent News

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

2025-12-23
இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார்  எஸ்.ஜெய்சங்கர்

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

2025-12-23
ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

2025-12-23
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

2025-12-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.