• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
“மகாராணி எலிசபெத் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்” – பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

“மகாராணி எலிசபெத் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்” – பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/09/08
in ஆசிரியர் தெரிவு, இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மகாராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கவலைப்பட்டதையடுத்து பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

“இன்று(வியாழக்கிழமை) காலையில் கூடுதலான பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மராணியின் உடல்நிலை குறித்து கவலை கொண்ட அவரது மருத்துவர்கள், தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பரிந்துரைத்துள்ளனர்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மகாராணி, பால்மோரல் கோட்டையில் செளகர்யமாக இருக்கிறார்,” எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பக்கிங்காம் அரண்மனை இது போன்ற ஒரு அறிக்கையை வெளியிடுவது மிகவும் அசாதாரணமானது.

பொதுவாக 96 வயதான மாராணியின் மருத்துவ விஷயங்கள் அவரது தனிப்பட்ட விவகாரமாகக் கருதப்படுவதால் அது தொடர்பான கருத்துக்கள் தவிர்க்கப்படும்.

மகாராணி தற்போது வசித்து வரும் ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையின் நுழைவாயில்கள் முன்பாக தடுப்புகள் போடப்பட்டுள்ளன.

இளவரசர் சார்ல்ஸ், அவரது மனைவியும் கோர்ன்வால் சீமாட்டியுமான கேமில்லா, ஏன் ஆகியோர் பால்மோரலில் உள்ளனர்.

யார்க் கோமகன் ஆண்ட்ரூ, வெஸ்ஸெக்ஸ் சீமாட்டியான சோஃபீ அபெர்தீனுக்கு மேற்கே உள்ள ஸ்காட்டிஷ் எஸ்டேட்டுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

மராணியின் மூத்த மகனும் அரியணை ஏறும் இரண்டாம் நிலையில் இருப்பவராகவும் உள்ள கேம்ப்ரிட்ஜ் கோமகனான இளவரசர் வில்லியம் பால்மோரலுக்கான வழியில் இருக்கிறார்.

அவரது மனைவியும் கேம்ப்ரிட்ஜ் சீமாட்டியுமான கேட் எனப்படும் கேத்ரைன் தமது பிள்ளைகளின் முதலாவது முழு பாடசாலை துவக்க தினம் என்பதால், வின்சர் கோட்டையில் இருக்கிறார்.

லண்டனில் உள்ள தொண்டு அமைப்பின் நிகழ்ச்சிக்கு செல்லவிருந்த சஸ்ஸெக்ஸ் கோமகன் ஹேரி, சீமாட்டி மேகன் ஆகியோர் பால்மோரல் நோக்கிப் புறப்பட்டுள்ளதாக அந்த தம்பதியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ‘மகாராணி கீழே விழுந்திருக்கலாம்’ போன்ற ஆதாரமற்ற ஊகங்களுக்கு எதிரான எச்சரிக்கைகளும் வந்துள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை பால்மோரலில் சொந்த கால்களுடனேயே மகாராணி நின்றிருந்தார். பிரித்தானியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட லிஸ் டிரஸ்ஸுடன் புன்னகைத்தபடி அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஆனால், மூத்த அமைச்சர்கள் பங்கெடுத்த பிரைவி கௌன்சிலின் மெய்நிகர் சந்திப்பு மட்டுமே கடைசி நிமிடத்தில் இரத்து செய்யப்பட்டதை வைத்து, மகாராணியின் உடல்நிலை பலவீனமானமாகி விட்டதாக தவறுதலாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியால் “முழு நாடும்” “ஆழ்ந்த கவலையில் இருக்கும்” என பிரதமர் லிஸ் டிரஸ் கூறியுள்ளார்.

“எனது எண்ணங்கள் – மற்றும் எங்கள் ஐக்கிய ராஜ்ஜியம் முழுவதும் உள்ள மக்களின் எண்ணங்கள் – இந்த நேரத்தில் மாட்சிமை பொருந்திய மகாராணி மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன,” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மகாராணி தமது 70 வருட ஆளுகையில், புதிய பிரதமராக நியமிக்கப்படுபவரை பக்கிங்காம் அரண்மனையில் சந்திப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கடந்த ஜூலை மாதம் முதல் தமது ஸ்கொட்லாந்து இல்லத்தில் அவர் கோடை விடுமுறையில் இருக்கிறார்.

கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி, “எனது பிரார்த்தனைகளும், [இங்கிலாந்து தேவாலயம்] தேசம் முழுவதும் உள்ள மக்களின் பிரார்த்தனைகளும் இன்று மகாராணிக்காக உள்ளன.”கடவுளின் பிரசன்னம் மகாராணியையும் அவரது குடும்பத்தினர் மற்றும் பால்மோரலில் அவரை பராமரித்து வருபவர்களையும் பலப்படுத்தி ஆறுதல்படுத்தட்டும்,” என அவர் கூறியுள்ளார்.

-பி.பி.சி தமிழ்-

Related

Tags: மகாராணி எலிசபெத்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 1996 வீடுகளை நிர்மாணிக்க தீர்மானம்!

Next Post

70 ஆண்டுகால ஆட்சியின் பின் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலம் ஆகினார்

Related Posts

மீட்பு பணிகளின் போது ட்ரோன் பயன்பாட்டை நிறுத்துமாறு விமானப் படை வலியுறுத்து!
இலங்கை

மீட்பு பணிகளின் போது ட்ரோன் பயன்பாட்டை நிறுத்துமாறு விமானப் படை வலியுறுத்து!

2025-12-01
பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!
இலங்கை

பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

2025-12-01
வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!
இலங்கை

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!

2025-12-01
ஐந்து  ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!
இங்கிலாந்து

ஐந்து ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

2025-12-01
வெல்லாவெளி பகுதியில்  வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!
கிழக்கு மாகாணம்

வெல்லாவெளி பகுதியில் வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!

2025-12-01
இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!
இங்கிலாந்து

இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!

2025-12-01
Next Post
70 ஆண்டுகால ஆட்சி நிறைவை கொண்டாடும் பிரித்தானிய மகாராணிக்கு கொரோனா தொற்று உறுதியானது!

70 ஆண்டுகால ஆட்சியின் பின் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலம் ஆகினார்

தன்னை அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தியது வடகொரியா!

தன்னை அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தியது வடகொரியா!

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்திய மக்களது உதவிக்கரம்!

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்திய மக்களது உதவிக்கரம்!

0
மீட்பு பணிகளின் போது ட்ரோன் பயன்பாட்டை நிறுத்துமாறு விமானப் படை வலியுறுத்து!

மீட்பு பணிகளின் போது ட்ரோன் பயன்பாட்டை நிறுத்துமாறு விமானப் படை வலியுறுத்து!

0
மன்னார்-குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,பொருட்கள் அனுப்பி வைப்பு!

மன்னார்-குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,பொருட்கள் அனுப்பி வைப்பு!

0
உடைப்பெடுத்தது மாவிலாறு  –  வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மூதுர் நகரம்

யாழில் பாதிக்கப்பட்டோர் தொகை 50 ஆயிரத்தை நெருங்கியது!

0
பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

0
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்திய மக்களது உதவிக்கரம்!

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்திய மக்களது உதவிக்கரம்!

2025-12-01
மீட்பு பணிகளின் போது ட்ரோன் பயன்பாட்டை நிறுத்துமாறு விமானப் படை வலியுறுத்து!

மீட்பு பணிகளின் போது ட்ரோன் பயன்பாட்டை நிறுத்துமாறு விமானப் படை வலியுறுத்து!

2025-12-01
மன்னார்-குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,பொருட்கள் அனுப்பி வைப்பு!

மன்னார்-குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,பொருட்கள் அனுப்பி வைப்பு!

2025-12-01
உடைப்பெடுத்தது மாவிலாறு  –  வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மூதுர் நகரம்

யாழில் பாதிக்கப்பட்டோர் தொகை 50 ஆயிரத்தை நெருங்கியது!

2025-12-01
பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

2025-12-01

Recent News

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்திய மக்களது உதவிக்கரம்!

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்திய மக்களது உதவிக்கரம்!

2025-12-01
மீட்பு பணிகளின் போது ட்ரோன் பயன்பாட்டை நிறுத்துமாறு விமானப் படை வலியுறுத்து!

மீட்பு பணிகளின் போது ட்ரோன் பயன்பாட்டை நிறுத்துமாறு விமானப் படை வலியுறுத்து!

2025-12-01
மன்னார்-குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,பொருட்கள் அனுப்பி வைப்பு!

மன்னார்-குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,பொருட்கள் அனுப்பி வைப்பு!

2025-12-01
உடைப்பெடுத்தது மாவிலாறு  –  வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மூதுர் நகரம்

யாழில் பாதிக்கப்பட்டோர் தொகை 50 ஆயிரத்தை நெருங்கியது!

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.