பெரியார் வழியில் தமிழ்ச் சமுதாயத்துக்கான கடமையை தி.மு.க. அரசாங்கம் செய்யும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 95 அடியில் பெரியார் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பெரியார் பிறந்த நாளான 17 ஆம் திகதியை சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டு, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தமிழ்ச் சமுதாயத்தை அறிவான சமூகமாக ஆக்கும் பணியை திராவிடர் கழகம் செய்து கொண்டிருக்கிறது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்ச் சமூகத்துக்கு பெரியார் வழியில் ஆக்கபூா்வமான வாய்ப்புகளையும், உன்னதமான வளர்ச்சியையும் உருவாக்கித் தருவோம் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.