• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மியன்மார், தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை – தமிழிசை!

மியன்மார், தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை – தமிழிசை!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/09/19
in இந்தியா
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

மியன்மார், தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரமத்தில் சம்ஸ்கார் பாரதி தமிழ்நாடு சார்பில் விடுதலை அமுத பெருவிழாவில் தாக்க்ஷாயினி ராமச்சந்திரன் எழுதி, இயக்கி, நடன அமைப்பு செய்த மூவர்ண நாட்டிய நாடகம் நடைபெற்றது.

அதில், சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.

தொடர்ந்து மேடையில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “நல்லதொரு நாடக நாட்டியம் நீங்கள் ரசித்து கொண்டிருந்தீர்கள். இடையில் கட்டயாமாக இடைவெளி விட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

நாடகம், நாட்டியம் பாடல்கள் பாரதியாரின் பாடல்கள் போல சுதந்திர கனலை ஊட்டியது வேறு இல்லை. 10 ஆண்டுகள் பாரதியாரை பாதுகாத்த மண் புதுச்சேரி. அதனால் தான் அதன் ஆளுநரான என்னை இந்த விழாவிற்கு அழைத்துள்ளனர்.

எல்லா கல்வி நிலையங்களிலும் இந்த நாடக நாட்டியத்தை போட்டுக் காட்ட வேண்டும். சுதந்திரம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டியதாயிற்று. 75 ஆவது சுதந்திர தினத்தை ஓராண்டு கொண்டாட வேண்டும் என்று பிரதமர் சொன்ன போது நான் பெரிதும் வரவேற்றன்.

தேசப் பற்று இருந்தது என்றால் நிச்சயமாக ஒழுக்க நெறிகளை கடைப்பிடிப்போம். இதை பார்த்தால் தியாகத்தின் சரித்திரம் தெரியும். அறியப்படாத தியாகிகளின் சரித்திரத்தை தினம் தினம் படிக்க வேண்டும்.

திரைப்பட கலைஞர்கள் பற்றி தெரியும் அளவுக்கு இந்திய தரைப்படம் கிடைக்க போராடியவர்கள் பற்றி தெரியவில்லை என்று தான் வருத்தம். தேசம் என்றால் அந்த உணர்வு வர வேண்டும். தூக்கில் இடப்பட்ட கட்டபொம்மன், நெல் மணி கூட வரி தர முடியாது என்று சொன்ன பூலித்தேவன் பற்றி தெரிய வேண்டும்.

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே அந்தமானில் தேசிய கொடி ஏற்றியவர் சுபாஷ் சந்திர போஸ். இந்த நிகழ்ச்சி நிச்சயம் தேச பக்தர்கள் உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நாட்டிற்கு உண்மையாக பக்தியாக இருக்க வேண்டும். நம் நாட்டின் பொருட்களை வாங்க வேண்டும்.

நாட்டிற்காக விளையாடுவது கூட தேசப் பற்று தான். உங்களை நீங்கள் மேம்படுத்தி முன்னிறுத்தி கொள்ள வேண்டும். விளையாட்டில் வெற்றி பெற்று நம் நாட்டு கொடி ஏற்றும் போது இருக்கும் உணர்வு சிறந்தது.

அரசன் மனதை அமைதியாக்க பாடல், நாட்டியம் பார்ப்பார்கள். என் கோரிக்கைகோலாட்டம் மீண்டும் புழக்கத்தில் வர வேண்டும். நான் அதில் கவனம் செலுத்துகிறேன். ஒவ்வொரு கலாசாரமும் மீண்டும் கொண்டு வர வேண்டும்.

முன் நாங்கள் பள்ளிக்கு செல்லும் போது பள்ளி பைகளில் இருக்கும் கோலாட்டம் கோலோச்ச வேண்டும். கொரோனா நமக்கு வணக்கம் தான் சொல்ல வேண்டும், வீட்டு வைத்தியம் மிளகு, இஞ்சி நல்லது என்றும், பாட்டி சொன்னதை சரி என்று சொல்லி கொடுத்தது.

முன்பெல்லாம் கிராமங்களில் காப்பு கட்டி கொள்வார்கள் மூட நம்பிக்கை என நினைத்தோம். மக்கள் கூடினால் தொற்று நோய்கள் வந்து விடக்கூடாது என்பதற்காக அப்படி வெளியூர்காரர்கள் வர கூடாது என்று சொன்னார்கள்.

கலாசாரத்தில் உள்ள நல்லவைகளை எடுத்து சொல்வோம். பாரதி பாடலை பாடிய பின் தற்கொலைக்கு எந்த குழந்தையாவது முயற்சி செய்யுமா. பலமான இந்தியர்களாக, சுய சார்பாளர்களாக வலம் வருவோம். வெள்ளையன் வெளியேறினால்  குண்டூசி கூட செய்ய முடியாது என்றார்கள். இன்று 150 நாடுகளுக்கு தடுப்பூசி கொடுத்து இருக்கிறோம்.

100 வது சுதந்திர தினத்தில் 2047 இல் இன்னும் 25 ஆண்டில் உலகிற்கே வழிகாட்டும். நாடாக மாறும் உலகிற்கே தலை தாங்கும் நாடாக உயர வேண்டும் என்றார் தமிழிசை செளந்தரராஜன்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “மியான்மர்,  தாய்லாந்து போன்ற நாடுகளில் வேலை தேடி சென்ற இளைஞர்களை சிலர் கடத்தி சென்று சட்ட விரோதமாக வேலை வாங்குவதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

புதுச்சேரி காரைக்கால் பகுதியை சேர்ந்த ஒருவர் இது போன்று சிக்கி இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அவரை பாதுகாக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்த நாட்டை சார்ந்தவர்கள் என்றாலும் துன்பப்பட கூடாது. கடைகளில் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்க கூடாது என்ற பாகுபாட்டை கூட பார்க்கிறோம். இதுபோன்ற பாகுபாடுகளை நம்மால் ஒப்புக் கொள்ளவே முடியாது“ எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: தமிழர்துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்மியன்மார்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

13 திருத்தச்சட்ட தீர்வை தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் – இரா.துரைரெட்ணம் அழைப்பு

Next Post

சம்பளம் வழங்காவிட்டால் தக்க பதிலடி வழங்கப்படும் என செந்தில் தொண்டமான் எச்சரிக்கை!

Related Posts

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”
JUST IN

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”

2025-11-30
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!
இந்தியா

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!

2025-11-30
வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு-  அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!
இந்தியா

வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு- அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!

2025-11-29
டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையவர் வீடி இடித்து நொறுக்கப்பட்டது!
இந்தியா

புதுடில்லி கார் குண்டுவெடிப்பு – வெளியான மேலும் பல உண்மைகள்!

2025-11-28
சென்யார் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பகுதிகளுக்கு எச்சரிக்கை!
இந்தியா

சென்யார் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பகுதிகளுக்கு எச்சரிக்கை!

2025-11-27
பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இன்ஸ்டா நண்பன்
ஆசிரியர் தெரிவு

பெங்களூரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ஏமாந்த இலங்கை மாணவி!

2025-11-26
Next Post
சம்பளம் வழங்காவிட்டால் தக்க பதிலடி வழங்கப்படும் என செந்தில் தொண்டமான் எச்சரிக்கை!

சம்பளம் வழங்காவிட்டால் தக்க பதிலடி வழங்கப்படும் என செந்தில் தொண்டமான் எச்சரிக்கை!

வீதி பாதுகாப்பு உலகத் தொடர்: பங்களாதேஷ் ஜாம்பவான் அணிக்கெதிரான போட்டியில் அவுஸ்ரேலிய ஜாம்பவான் அணி வெற்றி!

வீதி பாதுகாப்பு உலகத் தொடர்: பங்களாதேஷ் ஜாம்பவான் அணிக்கெதிரான போட்டியில் அவுஸ்ரேலிய ஜாம்பவான் அணி வெற்றி!

தோட்டக் கம்பனிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் தொழிலாளர்கள் சிக்கிவிடக்கூடாது – ஜீவன்

தோட்டக் கம்பனிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் தொழிலாளர்கள் சிக்கிவிடக்கூடாது - ஜீவன்

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

0
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

0
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

0
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

0
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

0
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

2025-11-30

Recent News

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.