கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் இன்றைய தினம்(10) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மக்களின் சுதந்திர உரிமைகள் மீது கை வைக்காதே என்ற தொனிப் பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.
சட்டத்தரணிகள் மற்றும் தொழில் வல்லுனர்கள் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கொழும்பு காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு காலிமுகத்திடல் வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.






