பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள ஹசாரா நகரில் உள்ள ஹரிபூர் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் தலைவர் அல்லாமா சாத் ரிஸ்வி ஈத் மிலாதுன் நபி ஊர்வலத்தில் உரையாற்ற திட்டமிட்டதால் விதிகளை மீறியிருந்தார்.
முஹம்மது நபியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஈத் மிலாத்-உன்-நபி கொண்டாடப்படுகிறது. மேலும் இது இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி-உல்-அவ்வல் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. இது சந்திரனைப் பார்த்தவுடன் தொடங்குகிறது. இந்நிகழ்வு நபிகளாரின் நினைவு நாளைக் குறிக்கிறது.
இந்நிலையில் குறித்த காலத்தில் ரிஸ்வி, விதிமுறைகளை மீறி, ஊர்வலத்தை நடத்தியதால், சித்திக்-இ-அக்பர் சௌக்கில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அங்கிருந்தே கோசங்களை எழுப்பியவாறு இருந்ததாகவும் பின்னர் திசைமாற்றி ஊர்வலத்தினை தொடர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.
தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தானின் உள்ளுர் தகவல்களின்படி, 30,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். இருப்பினும் அந்த எண்ணிக்கை 6,000 முதல் 7,000 க்கு மேல் இல்லை என்றும் இணையங்கள் தெரிவித்துள்ளன.
எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்தையும் சமாளிப்பதற்காக காவல்துறை நிர்வாகம் 1,600 கலகத் தடுப்பு உறுப்பினர்களை வீதியில் நிறுத்தினார்கள்.
எந்த அமைதியின்மையையும் தணிக்க, சிவில் நிர்வாகத்திற்கு உதவியாக அனுப்பப்பட்ட ஃபிரண்டியர் கோர்ப்ஸின் இரண்டு கட்டமைப்புக்கள் விழிப்புடன் செயற்பாட்டில் இருந்தன.
எவ்வாறாயினும், பேரணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெடுஞ்சாலையை பயன்படுத்தி மாவட்டத்திற்கு வெளியில் செல்லும் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.
மேலும், நாள் முழுவதும் தொலைத்தொடர்பு சேவை நிறுத்தப்பட்டது. இருப்பினும், இணைய சேவை செயல்பாட்டில் இருந்தது ஆனால் மோசமான சமிக்ஞைகளுடன் இருந்ததாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.