• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ரி-20 உலகக்கிண்ணத்தை வெல்லப் போவது யார்? இங்கிலாந்து- பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை!

ரி-20 உலகக்கிண்ணத்தை வெல்லப் போவது யார்? இங்கிலாந்து- பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை!

Anoj by Anoj
2022/11/12
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சம்பியன் கிண்ணத்திற்கான, இறுதிப் போட்டி இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

ஒருமாத காலமாக நடைபெற்றுவரும் தொடரின் இறுதிப் போட்டி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லரும் பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமும் தலைமை தாங்கவுள்ளனர்.

நடப்பு உலகக்கிண்ணத் தொடரை பொறுத்தவரை இரு அணிகளுமே கடுமையான அழுத்தங்கள் மற்றும் ஏமாற்றங்களுக்கு மத்தியில் இறுதிப் போட்டியை தொட்டுள்ளன.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஆரம்ப போட்டிகளில் மழை குறுக்கிட, அடுத்துவந்த போட்டிகளில் கட்டாய வெற்றி என போராடி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. குறிப்பாக சுப்பர்-12 சுற்றில் டக்வத் லுயிஸ் முறைப்படி அயர்லாந்து அணியிடம் தோல்வியடைந்திருந்தது.

அடுத்துவந்த போட்டிகளில் மழைக்குறுக்கிட்டாலோ அல்லது தோல்வியடைந்தாலோ தொடரிலிருந்து வெளியேற நேரிடும் அல்லது அவுஸ்ரேலியாவுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி, இந்தியா நிர்ணயித்த 168 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை எவ்வித விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்து இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

இதேவேளை, பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இந்தியாவிடம் தோல்வி, சிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வி என கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி, ஏறக்குறைய தொடரிலிருந்து வெளியேறி விட்டது என்ற நிலையில் இருந்த போது, தென்னாபிரிக்கா அணியை, நெதர்லாந்து அணி தோற்கடிக்க, பாகிஸ்தான் அணி, அதிர்ஷ்டவசமாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

அரையிறுதிப் போட்டியில், பலம்வாய்ந்த நியூஸிலாந்து அணியை, தனது ஆரம்ப துடுப்பாட்டத்தை கொண்டு மிரட்டிய பாகிஸ்தான், இலகுவான வெற்றியை பதிவு செய்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

கடந்த போட்டிகளில் சோபிக்க தவறியிருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அணித்தலைவர் பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோர், நியூஸிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில், 105 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் வெற்றியை இலகுப்படுத்தினர்.

இரு அணிகளும் ரி-20 உலகக்கிண்ணத் தொடரை பொறுத்தவரை இரண்டு முறை மோதியுள்ளன. அதில் இரண்டு போட்டிகளிலுமே இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

சர்வதேச ரி-20 போட்டிகளை பொறுத்தவரை இரு அணிகளும் 28 முறை மோதியுள்ளன. இதில் 18 முறை இங்கிலாந்து அணியும் 9 முறை பாகிஸ்தான் அணியும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

முன்னதாக, ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னோட்டத் தொடராக நடைபெற்ற இரு அணிகளுக்கிடையிலான ஏழு போட்டிகள் கொண்ட தொடரை, இங்கிலாந்து அணி 4-3 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.

இந்த தொடரின் போது, இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களான, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்றிருக்கவில்லை. இந்த அணியை மொயின் அலி வழிநடத்தியிருந்தார்.

தற்போது கடந்த தொடரை வென்ற அதே உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணியை, இங்கிலாந்து அணி நாளை எதிர்கொள்ளவுள்ளது.
30 ஆண்டுகளுக்கு பிறகு மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டு, இதே மைதானத்தில் 50 ஓவர்கள் உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, சம்பியன் பட்டம் வென்றிருந்தது.

ரி-20 உலகக்கிண்ணத் தொடரைப் பொறுத்தவரை இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளு; இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது மூன்றாவது முறையாகும்.

கடந்த 2010ஆம் ஆண்டு போல் கொலிங்வுட் தலைமையிலான இங்கிலாந்து அணி, அவுஸ்ரேலியாவை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது.

இதனைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகள் அணியிடம் சம்பியன் கிண்ணத்தை பறிகொடுத்திருந்தது.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை, முதல் தொடரிலேயே இந்தியாவிடம் தோல்வியடைந்து சம்பியன் கிண்ணத்தை இழந்தது.

இதனைத்தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் முதல் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

இதுவரை நடைபெற்றுள்ள எட்டு ரி-20 உலகக்கிண்ணத் தொடரை பொறுத்தவரை 2007ஆம் ஆண்டு இந்தியா, 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான், 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து, 2012ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள், 2014ஆம் ஆண்டு இலங்கை, 2016ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள், 2021ஆம் ஆண்டு அவுஸ்ரேலியா ஆகிய அணிகள் சம்பியன் கிண்ணங்களை வென்றுள்ளன.

Related

Tags: இங்கிலாந்து அணிஇரசிகர்கள்இறுதிப் போட்டிசம்பியன்பாகிஸ்தான் அணிரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொய்யான தகவல்களை வழங்கி பெறப்பட்ட கடவுச்சீட்டு ? – டயானா கமகே வெளிநாடு செல்லத் தடை

Next Post

இலங்கை மீது மேக்னிட்ஸ்க் பாணியில் பொருளாதாரத் தடைகளை விதிக்க பிரித்தானிய உறுப்பினர்கள் கோரிக்கை !

Related Posts

இங்கிலாந்தை 82 ஓட்டங்களால் வீழ்த்தி ஆஷஸ் டெஸ்ட் தொடரை தன்வசப்படுத்திய அவுஸ்திரேலியா!
கிரிக்கெட்

இங்கிலாந்தை 82 ஓட்டங்களால் வீழ்த்தி ஆஷஸ் டெஸ்ட் தொடரை தன்வசப்படுத்திய அவுஸ்திரேலியா!

2025-12-21
மூன்றாவது டெஸ்டில் இருந்து நாதன் லியோன் விலகல்!
கிரிக்கெட்

மூன்றாவது டெஸ்டில் இருந்து நாதன் லியோன் விலகல்!

2025-12-21
டி20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு;  ஷுப்மன் கில் நீக்கம்!
கிரிக்கெட்

டி20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு; ஷுப்மன் கில் நீக்கம்!

2025-12-20
30 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி:20 தொடரை கைப்பற்றிய இந்தியா!
கிரிக்கெட்

30 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி:20 தொடரை கைப்பற்றிய இந்தியா!

2025-12-20
2026 FIFA உலகக் கிண்ண வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை இரட்டிப்பு!
ஆசிரியர் தெரிவு

2026 FIFA உலகக் கிண்ண வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை இரட்டிப்பு!

2025-12-19
டி20 உலகக் கிண்ணம்: இலங்கை அணியை வழிநடத்த தயாராகும் தசூன் ஷானக்க!
கிரிக்கெட்

டி20 உலகக் கிண்ணம்: இலங்கை அணியை வழிநடத்த தயாராகும் தசூன் ஷானக்க!

2025-12-19
Next Post
மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை : இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து பிரித்தானியா எச்சரிக்கை

இலங்கை மீது மேக்னிட்ஸ்க் பாணியில் பொருளாதாரத் தடைகளை விதிக்க பிரித்தானிய உறுப்பினர்கள் கோரிக்கை !

ஊடகவியலாளர் மிரட்டல் குற்றச்சாட்டு: ஈரான் தூதரக அதிகாரிக்கு பிரித்தானியா அழைப்பாணை!

ஊடகவியலாளர் மிரட்டல் குற்றச்சாட்டு: ஈரான் தூதரக அதிகாரிக்கு பிரித்தானியா அழைப்பாணை!

மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – கலாமதி பத்மராஜா

மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - கலாமதி பத்மராஜா

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
பங்களாதேஷ் பதட்டங்களால் டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

பங்களாதேஷ் பதட்டங்களால் டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

0
இலங்கைக்கான 450 மில்லியன் டொலர் மீள்கட்டமைப்பு தொகுப்பை அறிவித்த இந்தியா!

இலங்கைக்கான 450 மில்லியன் டொலர் மீள்கட்டமைப்பு தொகுப்பை அறிவித்த இந்தியா!

0
அமெரிக்கா – வெனிசுலா பதட்டம்; தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்!

அமெரிக்கா – வெனிசுலா பதட்டம்; தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்!

0
பங்களாதேஷ் பதட்டங்களால் டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

பங்களாதேஷ் பதட்டங்களால் டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

2025-12-23
இலங்கைக்கான 450 மில்லியன் டொலர் மீள்கட்டமைப்பு தொகுப்பை அறிவித்த இந்தியா!

இலங்கைக்கான 450 மில்லியன் டொலர் மீள்கட்டமைப்பு தொகுப்பை அறிவித்த இந்தியா!

2025-12-23
அமெரிக்கா – வெனிசுலா பதட்டம்; தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்!

அமெரிக்கா – வெனிசுலா பதட்டம்; தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்!

2025-12-23
கோட்டைக்கும் – மருதானைக்கும் இடையில் தடம்புரண்ட ரயில்!

கோட்டைக்கும் – மருதானைக்கும் இடையில் தடம்புரண்ட ரயில்!

2025-12-23
டெக்சாஸில் மருத்துவ விமானம் விபத்து;  5 பேர் உயிரிழப்பு!

டெக்சாஸில் மருத்துவ விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

2025-12-23

Recent News

பங்களாதேஷ் பதட்டங்களால் டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

பங்களாதேஷ் பதட்டங்களால் டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

2025-12-23
இலங்கைக்கான 450 மில்லியன் டொலர் மீள்கட்டமைப்பு தொகுப்பை அறிவித்த இந்தியா!

இலங்கைக்கான 450 மில்லியன் டொலர் மீள்கட்டமைப்பு தொகுப்பை அறிவித்த இந்தியா!

2025-12-23
அமெரிக்கா – வெனிசுலா பதட்டம்; தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்!

அமெரிக்கா – வெனிசுலா பதட்டம்; தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்!

2025-12-23
கோட்டைக்கும் – மருதானைக்கும் இடையில் தடம்புரண்ட ரயில்!

கோட்டைக்கும் – மருதானைக்கும் இடையில் தடம்புரண்ட ரயில்!

2025-12-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.