• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
புகலிடக் கோரிக்கையாளர்களை தடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பரிஸ் விரையும் சுயெல்லா பிரேவர்மேன்!

புகலிடக் கோரிக்கையாளர்களை தடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பரிஸ் விரையும் சுயெல்லா பிரேவர்மேன்!

Anoj by Anoj
2022/11/14
in இங்கிலாந்து
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறிய படகுகளில் மக்கள் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் முயற்சியில் விரிவாக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக உட்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் பாரிஸுக்குச் செல்லவுள்ளார்.

திருத்தப்பட்ட உடன்படிக்கையின்படி, பிரித்தானியா, பிரான்சுக்கு அவர்களின் முடிவில் அதிகரித்த ரோந்துச் செலவை ஈடுகட்டச் செலுத்தும் தொகை ஆண்டுக்கு 55 பவுண்டுகளிலிருந்து 63 மில்லியன் பவுண்டுகளாக உயரும்.

மக்கள் செல்வதைத் தடுக்க பிரான்ஸ் கடற்கரையில் ரோந்து செல்லும் அதிகாரிகளின் எண்ணிக்கை 200ல் இருந்து 300ஆக உயரும்.
மேற்குறித்த பணம், கூடுதல் அதிகாரிகள், ரோந்துகள், ஆளில்லா விமானங்கள், இரவு பார்வை உபகரணங்களைப் பயன்படுத்த செலவிடப்படும்.

மேலும், பிரான்சில் வரவேற்பு மற்றும் அகற்றும் மையங்களை அதிகரிப்பதற்கும் செலவிடப்படும்.

லொறிகள் வழியாக பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க கண்காணிப்பு கெமரா மற்றும் கண்டறியும் நாய் குழுக்களின் பயன்பாட்டை அதிகரிக்க பிரான்ஸ் துறைமுகங்கள் முதலீடு பெறும்.

இந்த ஒப்பந்தம் பல மாதங்களாக முடிவடைந்த போதிலும், பிரித்தானியாவில் நிலையான அரசாங்கம் அமையும் வரை பிரான்ஸ் அரசாங்கம் அதனை இறுதி செய்ய தயங்கியதாக கூறப்படுகின்றது.

கென்ட்டின் மான்ஸ்டனில் உள்ள புலம்பெயர்ந்தோர் செயலாக்க தளத்தில் கடுமையான கூட்ட நெரிசல் மற்றும் அவர்களின் புகலிட விண்ணப்பங்கள் நிறைவடைவதற்குக் காத்திருப்போருக்கு வீட்டுவசதிக்கான செலவினங்களுக்காக அரசாங்கத்தை இலக்காகக் கொண்ட பல வார விமர்சனங்களுக்குப் பிறகு இது வந்துள்ளது.

கடந்த மாதம், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான ஹோட்டல்களுக்காக பிரித்தானியா ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 7 மில்லியன் பவுண்டுகள் செலவழிப்பதாக உள்நாட்டு விவகாரக் குழு கண்டறித்தது. 2021ஆம் ஆண்டில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்த புலம்பெயர்ந்தோரின் புகலிடக் கோரிக்கைகளில் 4 சதவீதத்தினர் மட்டுமே செயற்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்தனர்.

சமீபத்திய வாரங்களில், பிரேவர்மேன் இந்த பிரச்சினையில் அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், பிரான்ஸ் உடனான ஒரு புதிய ஒப்பந்தம் செயல்முறை மீதான அழுத்தத்தை குறைக்கும் என்று உட்துறை செயலாளர் நம்புகின்றார்.

இந்த ஆண்டு இதுவரை, 40,000க்கும் அதிகமானோர் ஆபத்தான கடக்கத்தை மேற்கொண்டுள்ளனர். இது பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

எனினும், விரிவாக்கப்பட்ட ஒப்பந்தம் பிரான்சில் செயல்படும் ஆட்கடத்தல்காரர்களை மேலும் சீர்குலைக்கும் அதே வேளையில் அது அவர்களின் வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

Tags: ஆங்கிலக் கால்வாய்ஆளில்லா விமானங்கள்உட்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன்ரோந்து
Share12Tweet7Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
இங்கிலாந்து

பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

2023-03-21
புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையால் தனியார் நிறுவனங்களுக்கு அதிக லாபம்!
இங்கிலாந்து

புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையால் தனியார் நிறுவனங்களுக்கு அதிக லாபம்!

2023-03-20
பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ருவாண்டாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ருவாண்டாவுக்கு பயணம்!

2023-03-18
கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள் ஐந்து வாரங்களுக்கு வேலைநிறுத்தம்!
இங்கிலாந்து

கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள் ஐந்து வாரங்களுக்கு வேலைநிறுத்தம்!

2023-03-17
மூன்று மில்லியன் மக்கள் ஓட்டுநர் உரிமத்தை பெறுவதில் தாமதம்!
இங்கிலாந்து

மூன்று மில்லியன் மக்கள் ஓட்டுநர் உரிமத்தை பெறுவதில் தாமதம்!

2023-03-17
ரப்பர்- பிளாஸ்டிக் தோட்டாக்களால் சிறுவர்கள் கொல்லப்படுவதை பொலிஸ்- இராணுவம் மறைக்கின்றது!
இங்கிலாந்து

ரப்பர்- பிளாஸ்டிக் தோட்டாக்களால் சிறுவர்கள் கொல்லப்படுவதை பொலிஸ்- இராணுவம் மறைக்கின்றது!

2023-03-14
Next Post
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கு எரிபொருளை வழங்க சீனா இணக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

2023-03-06
வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

2023-03-07
பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

எரிபொருள் விலை குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு

2023-03-21
நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானம்!

டொலரின் கொள்விலை மற்றும் விற்பனை விலைகளில் வீழ்ச்சி !

2023-03-21
அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு இலங்கைவர தடை !

தங்கத்தின் விலையில் இன்று மேலும் வீழ்ச்சி !

2023-03-07
தமிழ்மக்களின் தேசிய ஐக்கியத்தைச் சிதைப்பது? நிலாந்தன்.

தமிழ்மக்களின் தேசிய ஐக்கியத்தைச் சிதைப்பது? நிலாந்தன்.

2023-03-26
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு – மனித உரிமைகள் குழு கடும் கரிசனை

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு – மனித உரிமைகள் குழு கடும் கரிசனை

2023-03-26
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

எண்ணெய் விலை மேலும் சரிவு !!

2023-03-26
ஆப்கானிஸ்தான் அல்லது இலங்கை : எந்த அணியுடன் மோதப்போகின்றது இந்தியா ?

ஆப்கானிஸ்தான் அல்லது இலங்கை : எந்த அணியுடன் மோதப்போகின்றது இந்தியா ?

2023-03-26
2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

10 ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு ஆரம்பம் – அரசியலமைப்பு பேரவை

2023-03-26

Recent News

தமிழ்மக்களின் தேசிய ஐக்கியத்தைச் சிதைப்பது? நிலாந்தன்.

தமிழ்மக்களின் தேசிய ஐக்கியத்தைச் சிதைப்பது? நிலாந்தன்.

2023-03-26
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு – மனித உரிமைகள் குழு கடும் கரிசனை

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு – மனித உரிமைகள் குழு கடும் கரிசனை

2023-03-26
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

எண்ணெய் விலை மேலும் சரிவு !!

2023-03-26
ஆப்கானிஸ்தான் அல்லது இலங்கை : எந்த அணியுடன் மோதப்போகின்றது இந்தியா ?

ஆப்கானிஸ்தான் அல்லது இலங்கை : எந்த அணியுடன் மோதப்போகின்றது இந்தியா ?

2023-03-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.