அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் அறிக்கையின்படி சர்ச்சைக்குரிய எல்லைகள் போன்ற பகுதிகளில், சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கும், ஆக்கிரமிப்புக்கள் மற்றும் வற்புறுத்தல்களுக்கு தீர்வு காண்பதற்கும் இந்தியாவுடனான தனது பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையில், வளர்ந்து வரும் சீன ஆக்கிரமிப்புக்கு மத்தியில் ஜனாதிபதி பைடனின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் வகைப்படுத்தப்படாத பகுதியொன்று உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுதந்திரமான அணுகலை உறுதி செய்வதற்கும் அதன் திறனை மேம்படுத்த இந்தியாவுடனான இருதரப்ப உறவகளை வலுப்படுத்தும் செயற்பாடுகளை எங்கள் பாதுகாப்பு கூட்டாண்மையை திணைக்களம் முன்னெடுக்கும் என்றும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த அறிக்கையில், மிக முக்கியமாக சீனா சாவால்களை அளிப்பதாக சுட்டிக்காட்டியிருப்பதோடு ரஷ்யா வெளிநாட்டிலும் தாயகத்திலும் அமெரிக்க தேசிய நலன்களுக்கு கடுமையான அச்சுறுத்தல்களை விடுகின்றமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்டு வரும் தீவிர சவாலானது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தையும் உள்ளடக்கியதாகவே உள்ளது என்றும், அறிக்கை மேலும் கூறுகிறது.
விசேடமாக, கிழக்கு சீனக் கடல் மீது கட்டுப்பாட்டை நிறுவுவதற்கான சீனாவின் பிரசாரங்களில் இருந்து ஏனைய நாடுகளை விடுபடச் செய்வதற்கு, அமெரிக்கக்கொள்கை மற்றும் சர்வதேச சட்டத்தின்படி, நேச நாடுகள் மற்றும் கூட்டாளர் முயற்சிகளை திணைக்களம் ஆதரிக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தாய்வான் ஜலசந்தி, தென் சீனக் கடல் மற்றும் இந்தியா போன்ற சர்ச்சைக்குரிய எல்லைகளில் அமெரிக்கா கூட்டுச்செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாகவும், அதன் தேசிய பாதுகாப்பு உத்தியில் அணு நிலை ஆய்வு மற்றும் ஏவுகணை பாதுகாப்பு ஆய்வு ஆகியவை உள்ளக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.