ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இன்று (ஞாயிற்க்கிழமை) பொரளை கெம்பல் மைதானத்தில் பிற்பகல் 01.00 மணியளவில் மாநாடு ஆரம்பமாகவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.