யாழ். செங்குந்தா பாடசாலையில் மாணவர்களுக்கான மதிய சத்துணவு திட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) புலம் பெயர்ந்தவர்களின் ஒருங்கிணைந்த அமைப்பின் விஸ்வநாதன் தலைமையில் குறித்த திட்டத்துக்கான 10இலட்சம் ரூபாநிதியுதவி காசோலைகள் வழங்கப்பட்டது
இதற்கமைய முதற் கட்டமாக பாடசாலையின் வங்கி கணக்கில் தலா 2 இலட்சம் ரூபாய் நிதியினை வட மாகாண ஆளுநரின் பெயரில் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வில் யாழ். வலயக்கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஷ்ணன் வடமாகாண ஆளுநரின் பிரத்தியோகச் செயலாளர் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.