• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஜி20 கூட்டமைப்புக்கான இந்தியாவின் தலைமைத்துவம்!

ஜி20 கூட்டமைப்புக்கான இந்தியாவின் தலைமைத்துவம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/12/21
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் வெகுவாக உச்சமடைந்திருக்கம் நிலையில் எதிர்வரும் 2023 ஆண்டுக்கான ஜி20 நாடுகளின் தலைமைப் பதவி இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.

இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெற்ற 17ஆவது கூட்டத்தொடரின் நிறைவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், அந்நாட்டின் ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவினால் குறித்த தலைமைப்பதவி கையளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்தில் வளர்ச்சியடைந்த  முன்னணி 20 நாடுகளின் முக்கிய கூட்டணியாக  இருப்பது ஜி20 கூட்டமைப்பாகும்.

இந்த அமைப்பில் இந்தியா, இந்தோனேஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, ஜேர்மனி, அவுஸ்ரேலியா, கனடா, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

ஜி20 நாடுகளின் அமைப்பின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் அதன் பங்காளி நாடுகளுக்கிடையில் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பு இந்த முறை இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் 2023ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பு செயல்பட உள்ளது.

இந்நிலையில் இந்தியா, தனது தலைமையின் கீழாக குறித்த கட்டமைப்பை அதியுச்ச வினைத்திறன் வெளிப்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தியாவில் இடம்பெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக இந்தியா அம்மாநாட்டுக்கான தயார் படுத்தல்களில் களமிறங்கி விட்டது.

முன்னதாக, தனது மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து பிரதமர் மோடி சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் குறித்த மாநாட்டை நடத்துதல் மற்றும் அதற்கான மாநில அரசாங்கங்களின் ஒத்துழைப்புக்களை கோரியுள்ளதோடு, கூட்டுச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கும் இணக்கத்தினை எட்டியுள்ளார்.

அதேநேரம், குறித்த ஜி20 மாநாட்டின் காலத்தினை அண்மித்து 200 மாநாடுகளை நடாத்துவதற்கு திட்டமிடலொன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனைவிடவும், ஜி20 இந்திய தலைமைத்துவத்திற்கான இலச்சினை கருப்பொருள் மற்றும் இணையத்தளம் ஆகியவை பிரதமர் நரேந்திர மோடியார் வெளியிட்டு வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் அடுத்த ஜி20 கூட்டத்தின் தலைமைத்துல நாடாக இந்தியாவின் கருப்பொருளான ‘வசுதைவ குடும்பகம்’ அல்லது ‘ஒரு பூமி ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம்’ என்பது புராதன சமஸ்கிருத நூலான உபநிடதத்திலிருந்து பெறப்பட்டதாகும்.

இக்கருப்பொருளானது மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிர்கள் ஆகியவையும் அவற்றுடன் தொடர்புடைய ஏனைய உயிரினங்கள் உட்பட சகல உயிர்களினது பெறுமதியினையும் அவை பூமியிலும் பரந்த இப்பிரபஞ்சத்திலும் கொண்டிருக்கும் தொடர்பினையும் உறுதிப்படுத்துவதாக அமைகின்றது.

அத்துடன் வாழ்வியல் செயற்திட்டம் தொடர்பாகவும் அதனுடன் இணைந்திருக்கின்ற தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் தேசிய அபிவிருத்தியில் தொடர்புடைய சூழலுக்கு இசைவான ஸ்திரமான மற்றும் பொறுப்புணர்வு மிக்க தெரிவுகள் மூலம் தூய்மையானதும் பசுமையானதும் செழுமைமிக்கதுமான எதிர்காலத்தைத்தரும் செயற்பாடுகளுக்கு வழிவகுக்கின்றது.

அதேநேரம், ஜி20 நாடுகளின் மாநாட்டு இலச்சினையானது இந்திய தேசியக்கொடியின் வர்ணங்களான காவி, வெள்ளை மற்றும் பச்சை, மற்றும் நீல நிறம் ஆகியவற்றின் மூலமான உத்வேகத்தை பிரதிபலிக்கின்றது.  மேலும் இந்தியாவின் தேசிய மலரான தாமரை சவால்களுக்கு இடையேயான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

ஒட்டுமொத்தமாக, இயற்கையுடன் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான இந்தியாவின் புவி சார்ந்த அணுகுமுறையை பூமிச் சின்னம் பிரதிபலிக்கிறது. ஜி-20 இலச்சினைக்கு கீழே எழுதப்பட்டுள்ள ‘பாரத்’ என்ற வார்த்தை தேவநாகிரி முறையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பம்சமாகும்.

அதுமட்டுமன்றி, ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் பிரதான இலக்கினை இத்தொனிப்பொருளும் இலச்சினையும் தெளிவாகவும் வலுவாகவும் பிரதிபலிக்கின்றன.

சவால்மிக்க இக்காலப்பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் சூழலுடன் நல்லிணக்கமான வாழ்வின் அவசியத்தையும் ஸ்திரமான, முழுமையான, பொறுப்புணர்வுள்ள மற்றும் பரந்தளவிலான வளர்ச்சி உலகிலுள்ள அனைவருக்கும் சமமாகவும் நீதி நெறிமுறைகளுக்கு அமைவாகவும் கிடைப்பதற்கான முயற்சிகளையும் ஜி20க்கான தனித்துவம் வாய்ந்த இந்திய அணுகுமுறையானது சுட்டிக்காட்டுகின்றது.

அத்துடன் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களின் மீதான அழுத்தத்தை பிரயோகிப்பதற்கான உலகளாவிய நிகழ்ச்சி நிரலில் இந்தியா பங்களிப்பு வழங்குவதற்கான வாய்ப்பினை தருவதாக ஜி20 தலைமைத்துவம் அமைகின்றது.

மேலும் மனிதர்களை மையப்படுத்திய அணுகுமுறையால் உயர்வடைந்த செழிப்பான எதிர்காலம், செயற்திறன்மிக்கதும் வளர்ச்சியடைந்ததுமான சமூகம், மற்றும் செழுமை ஆகியவற்றை  இலக்காகக் கொண்டு, இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் இடம்பெற்ற 2022 ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஆரம்பமான இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047ஐ  நோக்கிய 25 ஆண்டுகளைக் குறிக்கும் ‘அம்ரித்காலின்’ ஆரம்பத்தையும் ஜி20க்கான இந்திய தலைமைத்துவம் சுட்டிக்காட்டுகிறது.

அத்துடன், இந்தியாவானது,  பங்களாதேஷ், எகிப்து, மொரிசியஸ் நெதர்லாந்து, நைஜீரியா, ஓமான், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை இம்மாநாட்டிற்கு விருந்தினர் அந்தஸ்துடன் அழைக்கவுள்ளது.

இது, இந்தியாவுக்கும் குறித்த நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவதற்கு மேலும் சந்தர்ப்பமாக அமையவுள்ளது.

அத்துடன், உலகளவில் மாறுபட்ட  அரசியல் நிர்வாகங்களைக் கொண்ட பலதரப்பு அரசியல் கட்டமைப்புகளைக் கொண்ட நாடுகளை  வழிநடத்துவதற்கான வாய்ப்பை இந்த தலைமைப் பதவி இந்தியாவிற்கு வழங்கியிருக்கிறது.

சர்வதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவிகிதத்தையும், சர்வதேச வர்த்தகத்தில் 59 சதவீதம் முதல் 77 சதவீதம் விகிதத்தையும், உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும், உலக நிலப்பரப்பில் 60மூ விகிதத்தையும், தொழில்துறையில் வளர்ந்த, வளர்ந்துவரும் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளை உள்ளடக்கியது தான்  இந்த ஜி20 கூட்டமைப்பு.  ஆகவே, இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டிற்கும், ஒத்துழைப்புக்கும் மற்றுமொரு திறவுகோலா இம்மாநாடு அமையவுள்ளது.

Related

Tags: ஜி20 கூட்டமைப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் உயிரிழந்தமைக்கு அதிக குளிரே காரணம்!

Next Post

தொடர் வேலைநிறுத்தங்களால் இரயில் வலையமைப்பு ஸ்தம்பிதம்: .ரயில் பயணிகளுக்கு பெரும் இடையூறு!

Related Posts

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !
இந்தியா

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

2025-12-02
இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”
ஆசிரியர் தெரிவு

இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”

2025-12-02
இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

2025-12-02
பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!
ஆசிரியர் தெரிவு

பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

2025-12-01
“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”
JUST IN

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”

2025-11-30
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!
இந்தியா

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!

2025-11-30
Next Post
தொடர் வேலைநிறுத்தங்களால் இரயில் வலையமைப்பு ஸ்தம்பிதம்: .ரயில் பயணிகளுக்கு பெரும் இடையூறு!

தொடர் வேலைநிறுத்தங்களால் இரயில் வலையமைப்பு ஸ்தம்பிதம்: .ரயில் பயணிகளுக்கு பெரும் இடையூறு!

சமுர்த்தி பயனாளர்கள் உள்ளிட்ட அரச உதவிகளை பெறுவோர் தொடர்பில் ஆய்வு!

சமுர்த்தி பயனாளர்கள் உள்ளிட்ட அரச உதவிகளை பெறுவோர் தொடர்பில் ஆய்வு!

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு வருடாந்தம் தங்கப்பதக்கங்கள்!

யாழ்.பல்கலை மாணவர்களின் தீர்க்கமானதொரு செயற்பாடு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

0
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

0
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

0
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

0
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

0
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

2025-12-02

Recent News

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.