• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
போக்குவரத்தால் மீள நெருங்கும் இந்திய இலங்கை நாடுகள்

போக்குவரத்தால் மீள நெருங்கும் இந்திய இலங்கை நாடுகள்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/04/15
in இலங்கை, பிரதான செய்திகள்
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான கப்பல் சேவை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகமானது, பிற பகுதிகளை இணைக்கும் முக்கிய இடமாகவும், இந்தியாவுக்கு மிக அருகில் நாகை மற்றும் காரைக்கால் பகுதிக்கு 56கடல் மைல் (100 கி.மீ) தொலைவில் உள்ளதாகும்.

முன்னதாக, போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடமாகாணத்தின் வளர்ச்சி பணிக்கு உதவ வேண்டும் என இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலுள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு 2018இல் 287 கோடி ரூபா நிதியுதவியை அளித்தது.

இந்த நிதியுதவி மூலம் காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக ரீதியிலான பயன்பாட்டுக்கும், சரக்குக் கப்பல்களைக் கையாளவும், பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்ற வகையிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் எஞ்சிய பணிகளை நிறைவு செய்து இந்தியாவுக்கும் இலங்கைக்குமான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்காக, துறைமுக அதிகாரசபை, காங்கேசன்துறையின் உட்டகட்டமைப்பு நிர்மானத்திற்காகவும் அபிவிருத்திற்காகவும் 144 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இதன் நிர்மாணப்பணிகளை கடற்படை முன்னெடுத்து வருவதோடு, அப்பணிகள் விரைவில் நிறைவடைந்தவுடன் காங்கேசன்துறை முனையம் இலங்கை துறைமுக அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

தற்போது, 60 கடற்படை வீரர்கள் கொண்ட குழு இலங்கை துறைமுக அதிகார சபை சிவில் பொறியியலாளர்களுடன் அனைத்து 1000 சதுர மீற்றர் அளவில் பயணிகள் முனையத்தை அமைத்து வருகின்றனர்.

காங்கேசன் துறையிலிருந்து காரைக்காலுக்கு முன்னெடுக்கப்படும் பயணிகள் கப்பல் சேவையின் முதற்கட்டமாக 120 பயணிகள் வரை பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பயணியும் தலா 100 கிலோ வரையிலான பொருட்களை எடுத்துசெல்லலாம் என்பதோடு கட்டணமாக 40 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காரைக்காலில் இருந்து காங்கேசன் துறைக்கு 5 நிறுவனங்கள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க விண்ணப்பித்திருந்தன.

இதில் ஐ.என்.டி.எஸ்.ஆர்.ஐ. என்ற நிறுவனத்துக்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறிருக்கையில், இந்திய ரயில்வேயானது சமய யாத்திரைக்கான விசேட ரயில் சேவையொன்றையும் ஆரம்பித்துள்ளது.

இந்த ரயில் முதல் நாள் டெல்லியில் இருந்து புறப்பட்டு, பௌத்த மதம் தொடங்கிய இடமான போதகயாவுக்கு இரண்டாம் நாள் பயணிக்கிறது.

புத்த கயா சுற்றுலா என அழைக்கப்படும் போத்கயா சுற்றுப்பயணத்தில் பல யாத்திரீகர்கள் ஈடுபடுகின்றார்கள்.

இவ்வாநான நிலையில் குறித்த ரயிலானது, மூன்றாம் நாளில் பாட்னாவிலிருந்து 72 கிமீ தொலைவில் அமைந்துள்ள நாலந்தாவிற்கு மக்களை அழைத்துச் செல்கிறது.

அங்கு பிரபலமான பகுதியான சூரிய மந்திர் மற்றும் ஹியூன் சாங் நினைவு மண்டபத்திற்கு செல்வதற்கு வாய்;ப்புக் கிட்டுகின்றது.

நான்காவது நாளில் ரயில் புனித நகரமான வாரணாசிக்கு யாத்திரீகர்களை அழைத்துச் செல்கிறது. இது பனாரஸ் மற்றும் காசி என்றும் அழைக்கப்படுகிறது.

புராண வரலாறுகளின் படி, புத்தர் தனது முதல் பிரசங்கத்தை வழங்குவதன் மூலம் தர்மத்தின் சக்கரத்தை இங்கே இயக்கினார்.

அதுமட்டுமன்றி இங்கேயே சிவனை வழிபட்ட ஆதி சங்கரர் மற்றும் சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு பெரிய கோவில்களை கட்டிய அக்பர் உட்பட பல்வேறு கோட்டுபாடுகள் கலாசாரங்களை ஆதரிக்கும் பல பேரரசர்களால் இந்த நகரம் ஆளப்பட்டுள்ளது.

ஐந்தாம் நாள் குறித்த ரயிலானது, நேபாளத்தின் லும்பினிக்குள் நுழையும். லும்பினி சித்தார்த்தன் பிறந்த இடம்.

காத்மாண்டுவில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இந்திய எல்லைக்கு மிக அருகில் லும்பினி அமைந்துள்ளது.

குறித்த பகுதி இப்போது புத்த புனித யாத்திரை மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு புத்தரின் தொல்பொருள் எச்சங்கள் இன்னும் உள்ளன.

பயணப் பட்டியலில் அடுத்த இடம் குஷிநகராகும். குறித்த ரயில் ஆறாம் நாள் குஷிநகரை அடையும். குறித்த பகுதி அழகான உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள புனித யாத்திரை தளமாகும்.

இது கோரக்பூரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. புத்தர் இங்கு நிர்வாணம் அடைந்ததால் இந்த இடம் புகழ் பெற்றது.

இவ்வாறாக, யாத்திரைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

இலங்கையிலிருந்து எதிர்காலத்தில் ஆகாய அல்லது கடல் வழியாக பயணிக்கும் ஒருவரால் இத்தகைய யாத்திரைகளில் ஈடுபட்டு இலகுவாக அனைத்து இடங்களையும் காண முடியும்.

இவ்விதமான சூழல் இந்திய இலங்கை இடையேயான பிணைப்பை மேலும் வலுவடையச் செய்கின்றது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தாய்வான் ஜனாதிபதி, அமெரிக்க சபாநாயகர் சந்திப்பு

Next Post

இந்தியாவின் காலத்தினால் செய்த உதவிகள்

Related Posts

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2025-12-18
இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்
இலங்கை

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

2025-12-18
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை
இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

2025-12-18
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்
இலங்கை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

2025-12-18
கட்டாக்காலிகளால் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்கள்; விரைந்து கட்டுப்படுத்துமாறு பிரதேசசபைகளை வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி
இலங்கை

கட்டாக்காலிகளால் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்கள்; விரைந்து கட்டுப்படுத்துமாறு பிரதேசசபைகளை வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி

2025-12-18
கோப்பாய் பாதீடு வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்
இலங்கை

கோப்பாய் பாதீடு வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்

2025-12-18
Next Post
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!

இந்தியாவின் காலத்தினால் செய்த உதவிகள்

ஜப்பானில் விருது பெற்ற இந்தியப் பெண்ணுக்கு மோடி வாழ்த்து

ஜப்பானில் விருது பெற்ற இந்தியப் பெண்ணுக்கு மோடி வாழ்த்து

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும் !

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் உட்பட கிழக்கில் அதிக வெப்பம் !!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

0
இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

0
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

0
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2025-12-18
இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

2025-12-18
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

2025-12-18
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

2025-12-18
கட்டாக்காலிகளால் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்கள்; விரைந்து கட்டுப்படுத்துமாறு பிரதேசசபைகளை வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி

கட்டாக்காலிகளால் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்கள்; விரைந்து கட்டுப்படுத்துமாறு பிரதேசசபைகளை வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி

2025-12-18

Recent News

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2025-12-18
இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

2025-12-18
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

2025-12-18
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

2025-12-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.