• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பசுமை ஹைட்ரஜன் திட்டத்தால் இந்தியாவிற்கு பாரிய நன்மை – ஹர்தீப் பூரி

பசுமை ஹைட்ரஜன் திட்டத்தால் இந்தியாவிற்கு பாரிய நன்மை – ஹர்தீப் பூரி

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/07/12
in இந்தியா
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

பசுமை ஹைட்ரஜன் எரிசக்தி இந்தியாவை எரிசக்தி வழங்குபவராகவும் ஏற்றுமதியாளராகவும் மாற்றும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

கணிசமான தேவை மற்றும் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்து சேமித்து வைக்கும் திறன் இந்தியாவிற்கு இருப்பதால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக இதற்கு என 200 பில்லியன் டொலர் செலவு செய்யும் இந்தியா, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் 300 பில்லியன் டொலரை ஏற்றுமதி நன்மையாக பெற்றுக்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லியில் இடம்பெற்ற புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட, 2023 ஆம் ஆண்டுக்கான பசுமை ஹைட்ரஜன் சர்வதேச மாநாட்டின் நிறைவு நாளில் ஹர்தீப் சிங் பூரி இதை கூறியுள்ளார்.

ஏழு முழுமையான அமர்வுகள், 16 தொழில்நுட்ப அமர்வுகள் மற்றும் நான்கு குழு விவாதங்கள் என மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்த மாநாட்டில் 2,700 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 135 பேச்சாளர்கள் பங்குபற்றினர்.

இந்த திட்டத்தில் நிதியளிப்பதில் சவால்கள் இருந்தாலும் இதன் தேவையை உணர்ந்து இந்த திட்டத்திற்கு வங்கிகள் சுதந்திரமாக நிதியளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக முன்னணி நிதி நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் முதலீடு செய்ய தீவிர ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

ஹைட்ரஜன் கூட்டணியில் சேர, ஐரோப்பிய முதலீட்டு வங்கி முறையாக ஒப்புக்கொண்ட நிலையில் இது 1 பில்லியன் யூரோக்கள் நிதியுதவியுடன் பெரிய அளவிலான தொழில்துறை மையத்தை உருவாக்க ஆதராக அமைந்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி சமீபத்தில் பசுமை வளர்ச்சிக்கான இந்தியாவின் அபிலாஷைகளுக்கு உதவுவதற்காக ஐந்து ஆண்டுகளில் 20 முதல் 25 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. அத்தோடு இந்தியாவின் குறைந்த கார்பன் மாற்ற பயணத்திற்கு ஆதரவாக 1.5 பில்லியன் டொலர் நிதியுதவிக்கு உலக வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

பசுமை ஹைட்ரஜனின் விலையை தற்போது 4.5/kg இலிருந்து 1/kg ஆக 2030க்குள் குறைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த ஷெர்பா அமிதாப் காந்த், பசுமை ஹைட்ரஜனுக்கு மாறுவதில் எரிபொருள் நிறுவனங்களும் சுத்திகரிப்பு நிலையங்களும் முன்னணியில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நீல ஹைட்ரஜனையோ அல்லது வேறு ஏதேனும் ஹைட்ரஜனையோ பயன்படுத்துமாறு பல நாடுகளும் தொழில்துறையினரும் கோரிக்கை விடுத்தாலும் இந்தியா பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை கைவிட கூடாது என அவர் மேலும் கூறியுள்ளார்.

மற்ற நாடுகள் சந்தையை கைப்பற்றுவதற்கும், முதலிடத்தைப் பெறுவதற்கும் முன்னர், தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை செயல்படுத்துவதில் இந்தியா வேகமாக செயற்பட வேண்டும் என இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட் தெரிவித்துள்ளார்.

இந்தியா உட்பட குறைந்தது 16 நாடுகள் ஏற்கனவே தங்கள் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களை வெளியிட்டுள்ள நிலையில் அதற்கான தேவை 2050 க்குள் ஐந்து மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் குறைந்தது 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு, இந்த திட்டத்திற்கு ஊக்கத்தொகையாக 17,490 கோடி ரூபாய் உட்பட ஆரம்ப செலவாக 19,744 கோடி ரூபாயை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஜனவரி 4 ஆம் திகதி அங்கீகாரம் வழங்கியது.

இந்த முயற்சியானது கார்பன் டை ஒக்சைடு வெளியேற்றத்தை ஆண்டுக்கு 50 மெட்ரிக் டன் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குப்வாராவில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காக்களுக்கு படையெடுக்கும் மக்கள்

Next Post

13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது – ஜோதிலிங்கம்

Related Posts

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !
இந்தியா

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

2025-12-02
இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”
ஆசிரியர் தெரிவு

இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”

2025-12-02
இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

2025-12-02
பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!
ஆசிரியர் தெரிவு

பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

2025-12-01
“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”
JUST IN

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”

2025-11-30
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!
இந்தியா

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!

2025-11-30
Next Post
13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது – ஜோதிலிங்கம்

13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது - ஜோதிலிங்கம்

தவறான ஊசி போடப்பட்டதால் யுவதி உயிரிழப்பு?

தவறான ஊசி போடப்பட்டதால் யுவதி உயிரிழப்பு?

ஒன்லைன் விநியோகஸ்தரின் திருட்டு : மக்களுக்கு எச்சரிக்கை!

ஒன்லைன் விநியோகஸ்தரின் திருட்டு : மக்களுக்கு எச்சரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

0
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

0
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

0
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

0
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

0
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

2025-12-02

Recent News

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.