அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிற்கான மேலதிக செயற்பாடுகளுக்காக பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் எல்ல பிரதேச செயலாளர் பிரிவு அலுவலகத்திற்கு முன்பாக இன்று முற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 77 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வரிசையில் காத்துக்கொண்டிருந்த குறித்த முதியவர் திடீரென மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.